.

Pages

Thursday, October 27, 2016

காதிர் முகைதீன் கல்லூரியில் முனைவர் பட்ட ஆய்வு குறித்த பொது வாய்மொழி தேர்வு !

அதிராம்பட்டினம், அக்-27
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரி விலங்கியல் துறையில், முனைவர் பட்ட ஆய்வு குறித்த பொது வாய்மொழி தேர்வு நடந்தது.

'மன்னார் வளைகுடா பகுதிகளான தூத்துக்குடி, கீழக்கரை கடல் பகுதிகளில் பூச்சிக்கொல்லி மற்றும் கடின உலோகங்களினால் ஏற்படும் மாசுகளை பாக்ட்ரியாக்கள் மூலம் நீக்கும் முறை பற்றி, ஆய்வாளர் எம். ஆனந்த் பங்கேற்று, தனது ஆய்வு குறித்து விளக்கம் அளித்தார். கல்லூரி முதல்வர் முனைவர் ஏ.எம் உதுமான் முகையதீன் முன்னிலை வகித்தார். வாய்மொழி தேர்வின் போது, ஆய்வு நெறியாளராக கல்லூரி விளங்கியல் துறைத்தலைவர் முனைவர் பி. குமாரசாமி, புறத்தேர்வாளராக திண்டுக்கல், காந்திகிராமம் பல்கலைக்கழக உயிரியல் துறைத் தலைவர் முனைவர் எம்.ஆர் ராஜன் ஆகியோர் பங்கேற்றனர்.

இதில் கல்லூரி விலங்கியல் துறை பேராசிரியர்கள் முனைவர் எஸ் ரவீந்திரன், முனைவர் ஏ அம்சத், முனைவர் முத்துகுமாரவேல், முனைவர் ஓ சாதிக், முனைவர் வி கானப்ரியா, முனைவர் ஏ மஹாராஜன், முனைவர் ஜே சுகுமாரன் மற்றும் விலங்கியல் துறை மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.