.

Pages

Thursday, October 20, 2016

கேரளாவில் அமீரகத்தின் 2வது துணை தூதரகம் இன்று திறப்பு !

அதிரை நியூஸ்: அக்-20
டெல்லியில் செயல்படும் அமீரக தூதரகத்துடன் கூடுதலாக மும்பையிலும் அமீரக துணைத் தூதரகம் பல்லாண்டுகளாக செயல்பட்டு வருகின்றது. இந்நிலையில் கேரள தலைநகர் திருவனந்தபுரத்தில் 'மனக்காடு' சந்திப்பில் (Manacaud Junction) இந்தியாவுக்கான 2வது துணைத் தூதரகம் இன்று திறக்கப்பட்டது.

இந்த 2வது துணைத் தூதரகத்தின் (Consulate)  துணைத் தூதராக (Consul General) ஜமால் அல் ஜாபி அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள். மேலும் திறப்பு விழா நிகழ்வின் போது கேரள கவர்னர் சதாசிவம், முதலமைச்சர் பினராயி விஜயன் உட்பட இந்திய, அமீரக முக்கிய புள்ளிகள் சமூகமளித்திருந்தனர்.

இத்துணை தூதரகம் திறக்கப்பட்டதன் மூலம் கேரளா மற்றும் தென்னிந்தியாவுக்காக விசா நடைமுறைகள் மிக எளிதாகுமென்றும், இத்துணை தூதரகத்தின் வழியாக விசா பெறுபவர்கள் எத்தகைய சிரமங்களுமின்றி ஈ-கேட் (e-gate) வழியாக அமீரகத்தினுள் பிரவேசிக்க முடியும்.

இந்நிலையில், அபுதாபியில் இந்திய தூதரகமும் துபையில் துணைத் தூதரகமும் செயல்பட்டு வரும் நிலையில் 2வது துணைத் தூதரகம் ஒன்றை அமீரகத்தில் கூடுதலாக திறந்திட மத்திய அரசின் ஒப்புதலுக்காக காத்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

Source: Emirates 247
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.