.

Pages

Friday, October 28, 2016

தனியார் ஆம்னி பேருந்துகளில் பயணிகளிடம் அதிக கட்டணம் வசூலிப்பதாக புகார்: ஆட்சியர் ஆய்வு !

தஞ்சாவூர் மாவட்டம் பழைய பேருந்து நிலையத்திலிருந்து வெளியூர் செல்லும் தனியார் ஆம்னி பேருந்துகளில் பயணிகளிடம் அதிக கட்டணம் வசூலிப்பதாக வரப்பெற்ற புகாரினை தொடர்ந்து  மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை அவர்கள் தலைமையில் நேற்று இரவு 10 மணியளவில் (27.10.2016)  திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையத்திலிருந்து தீபாவளி பண்டிகையை முன்னிட்டு  சென்னை, நாகர்கோவில் போன்ற இடங்களில் செல்லும் தனியார் ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறதா என்பதை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் பேருந்துகளில் ஒவ்வொரு பயணிகளிடம் பயணச்சீட்டு சரி பார்த்து பேருந்து கட்டணம் கூடுதலாக வசூலிக்கப்படுகிறதா என்பதை ஆய்வு செய்தார்.  பின்னர் காந்திஜி சாலையில் உள்ள தனியார் பேருந் பார்சல் பதிவு செய்யும் மையத்திற்கும், டிக்கெட் முன் பதிவு செய்யும் பதிவேடுகளையும் சோதனை நடத்தினார்.

பின்னர் மாவட்ட ஆட்சித் தலைவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது; தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தனியார் ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது என சென்னை உயர்நீதி மன்ற கிளை மதுரை உயர்நீதி மன்றம் உத்தரவிடப்பட்டுள்ளது.  இதனை தொடர்ந்து கண்காணிக்க மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தலைமையில் கோட்டாட்சியர், வட்டார போக்குவரத்து அலுவலர்கள், வட்டாட்சியர், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் ஆகியோர் கொண்ட குழு அமைக்கப்பட்டு இன்று முதல் வருகின்ற 31.10.2016 வரை தீவிரமாக தனியார் ஆம்னி பேருந்துகள் கண்காணிக்கப்படும் என மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை அவர்கள் தெரிவித்தார்.

ஆய்வின் போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ஜெ.மகேஷ், வட்டார போக்குவரத்து அலுவலர் ராஜ்குமார், வட்டார போக்குவரத்து ஆய்வாளர்; விஜயகுமார், மாவட்ட ஆய்வு குழு அலுவலர் ஹரிதாஸ் மற்றும் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.