.

Pages

Monday, October 17, 2016

அமீரகத்திற்கான புதிய இந்திய தூதராக நவ்தீப் சிங் சூரி நியமனம் !

அதிரை நியூஸ்:
துபாய், அக்-17
அமீரகத்திற்கான இந்திய தூதர் T.P. சீதாராமன் அவர்கள் கடந்த ஆகஸ்ட் மாதம் ஓய்வுபெற்றதை தொடர்ந்து புதிய தூதராக தற்போது ஆஸ்திரேலியாவில் இந்திய ஹை கமிஷனராக பணிபுரியும் நவ்தீப் சிங் சூரி நியமிக்கப்பட்டுள்ளதாக அமீரக தூதரக அதிகாரி நீதா பூஷன் அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

இன்னும் சில வாரங்களில் தூதராக பொறுப்பேற்கவுள்ள நவ்தீப் சிங் சூரி 1983 ஆம் ஆண்டு முதல் இந்திய வெளியுறவுத்துறை அதிகாரியாக கெய்ரோ (எகிப்து), டமாஸ்கஸ் (சிரியா), வாஷிங்டன் (அமெரிக்கா), தாருஸ் ஸலாம் (புருணை), லண்டன் (இங்கிலாந்து) ஆகிய இடங்களிலும் கவுன்சல் ஜெனரலாக ஜோஹன்னஸ் பர்க்கிலும் (தென் ஆப்பிரிக்கா), இந்திய தூதராக எகிப்திலும் பணியாற்றியுள்ளார்.

பொருளாதாரத்தில் முதுகலை பட்டம் பெற்றுள்ள சூரி அரபி மற்றும் பிரேஞ்ச் மொழிகளையும் பயின்றுள்ளார். மேலும் வெளியுறவு துறையில் சமூக ஊடக பயன்பாட்டை அறிமுகப்படுத்தியதற்காக 2 விருதுகளையும் பெற்றுள்ளார்.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.