கண்காணிக்க வேண்டும் என்று அனைத்து வங்கிகளுக்கு
மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை உத்தரவு பிறப்பித்துள்ளார்.
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்ட அரங்கில் அனைத்து வங்கியாளர்களுக்கு தேர்தல் தொடர்பான விதிமுறைகள் கடைப்பிடிப்பது தொடர்பாக மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை தலைமையில் இன்று (20.10.2016) நடைபெற்றது.
இந்திய தேர்தல் ஆணையம் தஞ்சாவூர் சட்ட மன்ற தொகுதி தேர்தல் தேதி 19.11.2016 நடைபெறும் என்று அறிவித்துள்ளது. வங்கிகளில் ஒரு இலட்சத்திற்கு மேல் மற்றும் ஒரு கணக்கிலிருந்து பல நபர்களுக்கு ஒரே நேரத்தில் ஒரே நாளில் பண பரிவர்த்தனை நடைபெறுமேயானால், அதனை உடனடியாக மாவட்ட நிர்வாகத்திற்கு தெரியப்படுத்த வேண்டும்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள 327 வங்கிகளும்; தினமும் நடைபெறும் பணப் பரிவர்த்தனையை மாவட்ட நிர்வாகத்திற்கு அறிக்கை கொடுக்க வேண்டும். ஏ.டி.எம் இயந்திரத்தில் பணம் எடுக்கும் பொது மக்கள் தங்களுடைய இரசீது பத்திரமாக எடுத்துச் செல்ல வேண்டும். வாகனப் பரிசோதனை செய்யப்படும் பொழுது உரிய ஆவணம் காண்பித்து பொது மக்கள் தங்களுடைய பணத்தை எடுத்துச் செல்வதற்கு வசதியாக இருக்கும். இவ்வாறு மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் முன்னோடி வங்கி மேலாளர் சீனிவாசன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (கணக்கு) கணேசன், தேர்தல் வட்டாட்சியர் ராமலிங்கம், பாரத ஸ்டேட் வங்கி, இந்தியன் வங்கி உள்ளிட்ட அனைத்து வங்கியாளர்கள் கலந்து கொண்டனர்.
1 லட்சத்துக்கு மேல் பரிவர்த்தனை செய்தால் மாவட்ட நிருவாக்கத்துக்கு தெரிய படுத்தனும்??. எதையும் பன்னாமல் கோடி கோடியா பதுங்கி வைத்திருக்கும் அரசியல்வாதிகளின் வீடு .. குடோன் .. பண்ணை இவைகளை பரிசோதித்தால் கிடைக்கும் கோடி பிறகு கேடிக்கு கிடைக்காது பணம்... பணநாயகத்தேர்தலில் இதெல்லாம் சகஜம்.. ஓட்டின் விலை 500 இருந்தது இப்போ கூடுதலாமே ஆமாம் ... தேர்தல் முறை மாறியதால் குதிரை பந்தயமும் வந்திருச்சு .. அப்போ வாக்காளர் காட்டில் மழை தானே!
ReplyDelete