.

Pages

Thursday, October 20, 2016

காதிர் முகைதீன் கல்லூரியில் மொழிபெயர்ப்பு சிறப்பு கருத்தரங்கம் ! ( படங்கள் )

அதிராம்பட்டினம், அக்-20
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரி ஆங்கிலம் முதுகலை மற்றும் ஆராய்ச்சி துறை சார்பில் மொழிபெயர்ப்பு சிறப்பு கருத்தரங்கம் நிகழ்ச்சி கல்லூரியில் நேற்று புதன்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் முனைவர் ஏ.எம் உதுமான் முகையதீன் தலைமை வகித்து உரை நிகழ்த்தினார். தொடக்கத்தில் கருத்தரங்கம் குறித்த அறிமுக உரையை ஆங்கிலத்துறை தலைவர் முனைவர் ஏ. முகம்மது முகைதீன் வழங்கி வரவேற்றார்.

சிறப்பு விருந்தினராக மதுரை காமராஜ் பல்கலைகழகக் தொலைதூரக்கல்வி ஆங்கிலத்துறைத் தலைவர் முனைவர் எஸ்.கனகராஜ் கலந்துகொண்டு பேசுகையில், 'மொழிபெயர்ப்பு பணி என்பது கலைப் பணி அல்ல, இது அறிவியல் ஆய்வுப் பணி ஆகும். மேலும் இப்பணியை முறையாக கற்பதன் மூலம் பல்வேறு வேலை வாய்ப்புகளை இலகுவாகப் பெற முடியும். பல்வேறு மொழிகள் பேசக்கூடிய இந்திய திருநாட்டில் மொழிபெயர்ப்பு என்பது அவசியம். தேசிய அறிவுசார் கழகம், டெல்லியில் தேசிய மொழி பெயர்ப்பு ஆணையத்தை ஏற்படுத்தி மைசூரில் மத்திய அரசின் மொழிகள் பள்ளி நிறுவனம் மூலம் மொழிபெயர்ப்பை ஊக்கப்படுத்தி வருகிறது' என்றார்.

நிகழ்ச்சிகளை கல்லூரி பேராசிரியர் பார்த்திபன் தொகுத்து வழங்கினார். விழா முடிவில் கல்லூரி பேராசிரியை பிளேமினா நன்றி கூறினார். இக்கருத்தரங்கில் கல்லூரி ஆங்கிலப்பாடப்பிரிவு மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.
 
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.