அதிரை நியூஸ்: துபாய், அக்-20
துபாயில் வசிக்கும் இந்தியரான அதீக் அஹ்மது அவர்களின் 4 வயது மகள் ரொமானா, இந்த பெண் குழந்தையின் ரெஸிடன்ஸ் விசா காலாவதியானதை தொடர்ந்து புதிய வழிகாட்டலின் அடிப்படையில் டைப்பிங் சென்டர் வழியாக விசாவை புதுப்பிக்க விண்ணப்பித்திருந்தார்.
விசா புதுப்பிக்கப்பட்ட பாஸ்போர்ட்டை கூரியர் சர்வீஸ் மூலம் பெற்ற அதீக் அஹமது திறந்து பார்க்க, தனது மகளுக்கு பதில் வேறு யாரோ ஒரு ஆண் குழந்தையின் விசா ஸ்டாம்ப் ஒட்டப்பட்டிருந்ததை பார்த்து அதிர்ந்தார்.
தற்போதைய விதிமுறைகளின்படி, இமிக்கிரேசன் அலுவலகத்திற்கும் செல்ல முடியாத நிலையில் தவித்தவருக்கு செய்தியை அறிந்த துபை இமிக்கிரேசன் அலுவலகம் மேற்கொண்டும் கூடுதல் கட்டணமின்றி விசா ஸ்டாம்பை மாற்றித்தர முன்வந்துள்ளது என்றாலும் நடந்துவிட்ட இந்த மனிதத் தவறை குறித்து விசாரிக்க உத்தரவிட்டுள்ளதுடன் இது டைப்பிங் சென்டரில் நிகழ்ந்த தவறாகவும் இருக்கக்கூடும் எனவும் சந்தேகம் தெரிவித்துள்ளது.
எது எப்படியோ விசா அடிக்கப்பட்ட பாஸ்போர்ட்டை பெற்றவுடன் ஒருமுறை திறந்து பார்த்து விசா ஸ்டாம்பை ஊர்ஜிதம் செய்து கொள்ளுங்கள் இல்லையெனில் விமான நிலையங்களில் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும் என்றும் அதீக் அஹமது அனைவருக்கும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்
துபாயில் வசிக்கும் இந்தியரான அதீக் அஹ்மது அவர்களின் 4 வயது மகள் ரொமானா, இந்த பெண் குழந்தையின் ரெஸிடன்ஸ் விசா காலாவதியானதை தொடர்ந்து புதிய வழிகாட்டலின் அடிப்படையில் டைப்பிங் சென்டர் வழியாக விசாவை புதுப்பிக்க விண்ணப்பித்திருந்தார்.
விசா புதுப்பிக்கப்பட்ட பாஸ்போர்ட்டை கூரியர் சர்வீஸ் மூலம் பெற்ற அதீக் அஹமது திறந்து பார்க்க, தனது மகளுக்கு பதில் வேறு யாரோ ஒரு ஆண் குழந்தையின் விசா ஸ்டாம்ப் ஒட்டப்பட்டிருந்ததை பார்த்து அதிர்ந்தார்.
தற்போதைய விதிமுறைகளின்படி, இமிக்கிரேசன் அலுவலகத்திற்கும் செல்ல முடியாத நிலையில் தவித்தவருக்கு செய்தியை அறிந்த துபை இமிக்கிரேசன் அலுவலகம் மேற்கொண்டும் கூடுதல் கட்டணமின்றி விசா ஸ்டாம்பை மாற்றித்தர முன்வந்துள்ளது என்றாலும் நடந்துவிட்ட இந்த மனிதத் தவறை குறித்து விசாரிக்க உத்தரவிட்டுள்ளதுடன் இது டைப்பிங் சென்டரில் நிகழ்ந்த தவறாகவும் இருக்கக்கூடும் எனவும் சந்தேகம் தெரிவித்துள்ளது.
எது எப்படியோ விசா அடிக்கப்பட்ட பாஸ்போர்ட்டை பெற்றவுடன் ஒருமுறை திறந்து பார்த்து விசா ஸ்டாம்பை ஊர்ஜிதம் செய்து கொள்ளுங்கள் இல்லையெனில் விமான நிலையங்களில் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும் என்றும் அதீக் அஹமது அனைவருக்கும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.