அதிராம்பட்டினம், அக்-31
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் அறிவியல் கண்காட்சி இன்று திங்கட்கிழமை நடைபெற்றது.
அறிவியல் கண்காட்சியை பள்ளித் தலைமை ஆசிரியை எஸ்.சுராஜ் தொடங்கி வைத்தார். பள்ளி பட்டதாரி ஆசிரியை எஸ். மேகலா, உடற்கல்வி ஆசிரியை ஜி அகிலா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கண்காட்சியில் 'சுற்றுச்சூழல் பாதுகாப்பு' என்ற தலைப்பின் கீழ் பள்ளி மாணவிகளின் படைப்புகள் இடம்பெற்றன. இதில் 6 ம் வகுப்பு முதல் 12 ம் வகுப்பு வரையிலான 80 மாணவிகள் கலந்துகொண்டு தங்களது படைப்புகளின் செயல்விளக்கத்தை பார்வையாளர்களுக்கு செய்து காண்பித்தனர்.
கண்காட்சிக்கு பள்ளி ஆசிரியைகள் எஸ். தையல்நாயகி, கே. அனுராதா, எம். ஹசினா நஸ்ரின் ஆகியோர் நடுவர்களாக இருந்து மாணவிகளின் சிறந்த படைப்புகளை தேர்வு செய்தனர்.
கண்காட்சியில் இடம் பெற்று இருந்த அக்னி ஏவுகணைகள், பேரிடர் குறைப்பு, வாகன விபத்து தடுப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு உள்ளிட்ட படைப்புகள் பார்வையாளர்களை பெரிதும் கவர்ந்தன.
இக்கண்காட்சியில் பள்ளி ஆசிரியைகள் ஏ. வஜீரா பானு, எம். சரண்யா, டி. ஆரோக்கிய தமிழ் மலர், ஜெய்னம்பு நாச்சியா, புவனேஸ்வரி, இலக்கியா உட்பட பள்ளி ஆசிரியைகள், அலுவலக பணியாளர்கள், பெற்றோர்கள், மாணவிகள் கலந்துகொண்டனர்.
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் அறிவியல் கண்காட்சி இன்று திங்கட்கிழமை நடைபெற்றது.
அறிவியல் கண்காட்சியை பள்ளித் தலைமை ஆசிரியை எஸ்.சுராஜ் தொடங்கி வைத்தார். பள்ளி பட்டதாரி ஆசிரியை எஸ். மேகலா, உடற்கல்வி ஆசிரியை ஜி அகிலா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கண்காட்சியில் 'சுற்றுச்சூழல் பாதுகாப்பு' என்ற தலைப்பின் கீழ் பள்ளி மாணவிகளின் படைப்புகள் இடம்பெற்றன. இதில் 6 ம் வகுப்பு முதல் 12 ம் வகுப்பு வரையிலான 80 மாணவிகள் கலந்துகொண்டு தங்களது படைப்புகளின் செயல்விளக்கத்தை பார்வையாளர்களுக்கு செய்து காண்பித்தனர்.
கண்காட்சிக்கு பள்ளி ஆசிரியைகள் எஸ். தையல்நாயகி, கே. அனுராதா, எம். ஹசினா நஸ்ரின் ஆகியோர் நடுவர்களாக இருந்து மாணவிகளின் சிறந்த படைப்புகளை தேர்வு செய்தனர்.
கண்காட்சியில் இடம் பெற்று இருந்த அக்னி ஏவுகணைகள், பேரிடர் குறைப்பு, வாகன விபத்து தடுப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு உள்ளிட்ட படைப்புகள் பார்வையாளர்களை பெரிதும் கவர்ந்தன.
இக்கண்காட்சியில் பள்ளி ஆசிரியைகள் ஏ. வஜீரா பானு, எம். சரண்யா, டி. ஆரோக்கிய தமிழ் மலர், ஜெய்னம்பு நாச்சியா, புவனேஸ்வரி, இலக்கியா உட்பட பள்ளி ஆசிரியைகள், அலுவலக பணியாளர்கள், பெற்றோர்கள், மாணவிகள் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.