அதிரை நியூஸ்: துபாய், அக்-17
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி நோட் 7 எனும் புதிய மாடலின் லித்தியம் பேட்டரியில் ஏற்பட்ட தயாரிப்பு தொழிற்நுட்ப கோளாரால் உலகின் பல இடங்களில் வெடித்தும், தீப்பிடித்தும் வந்ததை தொடர்ந்து சாம்சங் நிறுவனம் இந்த மாடல் தயாரிப்பை முழுமையாக கைவிட்டதுடன் இவ்வகை ஸ்மார்ட் போன்கள் அனைத்தையும் சந்தையிலிருந்தும் திரும்பப் பெற்று வருகின்றன.
கடந்த மாதங்களில் ஒரு சில விமானங்களிலும் இந்த ஸ்மார்ட் போன்கள் தீப்பிடித்ததை தொடர்ந்து தற்காலிகமாக விமானங்களில் பயன்படுத்துவதற்கும், ரீ சார்ஜ் செய்வதற்கும் எடிஹாட், எமிரேட்ஸ் மற்றும் ஃபிளை துபை ஆகிய விமான நிறுவனங்கள் தடை விதித்திருந்தன.
தற்போது மேற்படி விமான நிறுவனங்கள் பயணப் பொதிகளிலோ (Checked-in Baggage) அல்லது கையில் கொண்டு செல்லும் பைகளிலோ (Cabin Baggage) சாம்சங் கேலக்ஸி நோட் 7 ஸ்மார்ட் போன்கள் மாடல்களை எடுத்துச் செல்ல முற்றிலும் தடைவிதித்துள்ளன.
தனிநபர்களின் உரிமையை விட ஒட்டுமொத்த பயணிகளின் நலனே முக்கியமென்பதால் இத்தகைய நடவடிக்கைகள் அவசியமாகின்றன என்றும், இத்தடையால் பாதிக்கப்படுபவர்களிடம் வருத்தம் தெரிவிப்பதாகவும் தெரிவித்துள்ளன.
Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி நோட் 7 எனும் புதிய மாடலின் லித்தியம் பேட்டரியில் ஏற்பட்ட தயாரிப்பு தொழிற்நுட்ப கோளாரால் உலகின் பல இடங்களில் வெடித்தும், தீப்பிடித்தும் வந்ததை தொடர்ந்து சாம்சங் நிறுவனம் இந்த மாடல் தயாரிப்பை முழுமையாக கைவிட்டதுடன் இவ்வகை ஸ்மார்ட் போன்கள் அனைத்தையும் சந்தையிலிருந்தும் திரும்பப் பெற்று வருகின்றன.
கடந்த மாதங்களில் ஒரு சில விமானங்களிலும் இந்த ஸ்மார்ட் போன்கள் தீப்பிடித்ததை தொடர்ந்து தற்காலிகமாக விமானங்களில் பயன்படுத்துவதற்கும், ரீ சார்ஜ் செய்வதற்கும் எடிஹாட், எமிரேட்ஸ் மற்றும் ஃபிளை துபை ஆகிய விமான நிறுவனங்கள் தடை விதித்திருந்தன.
தற்போது மேற்படி விமான நிறுவனங்கள் பயணப் பொதிகளிலோ (Checked-in Baggage) அல்லது கையில் கொண்டு செல்லும் பைகளிலோ (Cabin Baggage) சாம்சங் கேலக்ஸி நோட் 7 ஸ்மார்ட் போன்கள் மாடல்களை எடுத்துச் செல்ல முற்றிலும் தடைவிதித்துள்ளன.
தனிநபர்களின் உரிமையை விட ஒட்டுமொத்த பயணிகளின் நலனே முக்கியமென்பதால் இத்தகைய நடவடிக்கைகள் அவசியமாகின்றன என்றும், இத்தடையால் பாதிக்கப்படுபவர்களிடம் வருத்தம் தெரிவிப்பதாகவும் தெரிவித்துள்ளன.
Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.