.

Pages

Wednesday, November 16, 2016

அதிரை அரசுப்பள்ளியில் குழந்தைகள் தினம் உற்சாகக் கொண்டாட்டம் !

அதிராம்பட்டினம், நவ-16
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் லயன்ஸ் சங்கம் சார்பில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ( 2 ம் நம்பர் ) குழந்தைகள் தினம் புதன்கிழமை உற்சாகமாக கொண்டாடப்பட்டன.

நிகழ்ச்சிக்கு லயன்ஸ் சங்கத் தலைவர் எஸ்.ஏ.சி இர்பான் சேக் தலைமை வகித்தார். செயலர் முத்துக்கிருஷ்ணன், பொருளாளர் சாகுல்ஹமீது ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட லயன்ஸ் சங்க மாவட்டத்தலைவர் மேஜர் டாக்டர் எஸ்.பி கணபதி குழந்தைகள் தின வாழ்த்துரை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் பள்ளி குழந்தைகளுக்கு நோட்டு புத்தகங்கள், வாய்ப்பாடு, பேனா, பென்சில், இனிப்பு உள்ளிட்டவை வழங்கப்பட்டன.

தொடக்கத்தில் பள்ளி தலைமை ஆசிரியை ஜே.பி சாந்தி வரவேற்றார். முடிவில் லயன்ஸ் சங்கத் முன்னாள் உடனடித் தலைவர் ஆறுமுகச்சாமி நன்றி கூறினார்.

இந்நிகழ்ச்சியில் லயன்ஸ் சங்க மண்டலச் செயலர் பேராசிரியர் செய்யது அகமது கபீர், மாவட்டத்தலைவர்கள் முஹம்மது முகைதீன், எஸ்.ஏ அப்துல் ஹமீது, பேராசிரியர் முஹம்மது அப்துல் காதர், மேஜர் முனைவர் எஸ்.பி கணபதி, சாரா அகமது, சாகுல் ஹமீது, ஆஃப்ரின் நெய்னா முஹம்மது, செல்வராஜ், உறுப்பினர்கள் உதயகுமார், அதிரை மைதீன், நிஜாமுதீன், பள்ளி ஆசிரியைகள் க.சுப்புலெட்சுமி, ந.உமாதேவி, ம.அருள்ஜோதி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
 
 
 
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.