.

Pages

Wednesday, November 16, 2016

ஜேஆர்சி ஆசிரியர்களுக்கான பேரிடர் மேலாண்மை பயிற்சி முகாம்!

பட்டுக்கோட்டை, நவ. 16:
பட்டுக்கோட்டை கல்வி மாவட்ட அளவில்  ஜூனியர் ரெட்கிராஸ் அமைப்பு ஆசிரியர்களுக்கான பேரிடர் மேலாண்மை மற்றும் முதலுதவி பயிற்சி முகாம் பட்டுக்கோட்டையை அடுத்த காசாங்காடு அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.

பள்ளித் தலைமை ஆசிரியர் கு.பாண்டியன் தலைமை வகித்தார். தஞ்சை மாவட்ட ரெட்கிராஸ் தலைவர் எஸ்.ராஜமாணிக்கம் முன்னிலை வகித்தார்.

பட்டுக்கோட்டை வருவாய்க் கோட்டாட்சியர் ஆர்.கோவிந்தராஜ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

ஆலத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் கருணாகரன், பட்டுக்கோட்டை தீத்தடுப்பு-மீட்புக்குழு நிலைய அலுவலர் மெல்கியூராஜா, மாவட்ட முதலுதவி பயிற்றுனர் சுரேஷ்குமார், தஞ்சை மாவட்ட ரெட்கிராஸ் பொருளாளர் முத்துக்குமார் கருத்தாளர்களாக கலந்து கொண்டு பயிற்சி அளித்தனர். நிகழ்ச்சியையொட்டி பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன.

ஜேஆர்சி மாவட்ட அமைப்பாளர் அ. பிச்சைமணி, பட்டுக்கோட்டை ஒன்றிய அமைப்பாளர் கணேஷ்குமார், கல்வி மாவட்ட இணை அமைப்பாளர் ப. சேகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.