.

Pages

Tuesday, November 15, 2016

புனித ஹஜ் யாத்திரை முடித்து நாடு திரும்பிய பயணிக்கு அதிரை லயன்ஸ் சங்கம் சார்பில் வரவேற்பு !

அதிராம்பட்டினம், நவ-15
புனித ஹஜ் கடமையை வெற்றிகரமாக நிறைவேற்றிவிட்டு தாயகம் திரும்பி உள்ள லயன்ஸ் சங்கம் மாவட்டத் தலைவர் ஹாஜி ஆஃப்ரின் நெய்னா முஹம்மது அவர்களுக்கு அதிராம்பட்டினம் லயன்ஸ் சங்கம் சார்பில் பொன்னாடை போர்த்தி வரவேற்பு அளிக்கப்பட்டது.

மேலும் அதிராம்பட்டினம் லயன்ஸ் சங்கம் சார்பில் இன்று பிறந்த நாள் விழா காணும் லயன்ஸ் சங்க மாவட்டத் தலைவர் சாரா அஹமது அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி இனிப்பு ஊட்டி பிறந்த நாள் வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. அதிராம்பட்டினம் லயன்ஸ் சங்க உறுப்பினர் வாசுதேவன் இல்லத்தில் சமீபத்தில் நடந்து முடிந்துள்ள திருமணத்தையொட்டி அவரது இல்லத்திற்கு நேரில் சென்று வாழ்த்து தெரிவிக்கப்பட்டன.

இந்நிகழ்ச்சியில், அதிராம்பட்டினம் லயன்ஸ் சங்கத் தலைவர் எஸ்.ஏ.சி இர்பான் சேக், செயலர் முத்துகிருஷ்ணன், பொருளாளர் சாகுல்ஹமீது, மண்டலச் செயலர் பேராசிரியர் செய்யது அகமது கபீர், மாவட்டத்தலைவர்கள் முஹம்மது முகைதீன், பேராசிரியர் முஹம்மது அப்துல் காதர், மேஜர் முனைவர் எஸ்.பி கணபதி, எஸ்.ஏ அப்துல் ஹமீது, சாரா அகமது, சாகுல் ஹமீது, முன்னாள் உடனடித் தலைவர் ஆறுமுகச்சாமி, செல்வராஜ், உறுப்பினர்கள் அதிரை மைதீன், நிஜாமுதீன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
 
 
 
 

1 comment:

  1. வாழ்த்துக்கள் !!!

    1.லயன்ஸ் சங்கம் மாவட்டத் தலைவர் ஹாஜி ஆஃப்ரின் நெய்னா முஹம்மது

    2.லயன்ஸ் சங்க மாவட்டத் தலைவர் சாரா அஹமது

    ஒரு மாவட்ட தலைவர் பதவிக்கு இரு தலைவர்கள் எப்படி இருக்க முடியும் ?

    விளக்கம் தரவும் !

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.