அதிரை நியூஸ்: ஜன.02
துபை, அல் கிஸஸ் பகுதியில் துப்புரவு பணியாளராக பணியாற்றி வருபவர் 'வினாகத்தர் அமானா மொட்டபட்டோ லால்' (Vinakatar Amana Motabato Lal) என்ற இந்தியர். இவர் தனது பணியின் போது ஒரு பையை கண்டெடுக்கின்றார். அதை திறந்து பார்த்தவருக்கு பேரதிர்ச்சி ஏனெனில் அதனுள்ளே தங்க வைர நகைகள் மின்னிக் கொண்டிருந்தன.
பையை மூடியவர் சலனங்களுக்கு ஆட்படாமல் உடனடியாக அல் கிஸஸ் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். அதனுள்ளே இருந்தது சுமார் 2 லட்சம் திர்ஹம் மதிப்புள்ள தங்க வைர நகைள்.
இந்தியத் தொழிலாளியின் நேர்மையை அங்கீகரிக்கும் விதமாக, அல் கிஸஸ் காவல் நிலைய இயக்குனர் பிரிகேடியர் யூசுப் அல் அதிதி அவர்கள் வினாகத்தர் அமானா மொட்டபட்டோ லாலை காவல் நிலையத்திற்கு நேரில் வரவழைத்து பாராட்டி நற்சான்றிதழும் அன்பளிப்பும் வழங்கி கவுரவித்தார்.
துப்புரவு பணியாளராக இருந்தும் பேராசை கொள்ளாத மனிதனாக நடந்து கொண்ட அந்த சொற்ப வருமான தொழிலாளி வினாகத்தர் அமானா மொட்டபட்டோ லால் அவர்களை சக இந்தியராக நாமும் மனமுவந்து பாராட்டுகின்றோம். நேர்மையாளனுக்கு சோதனைகள் அதிகம் ஆனால் இறுதியில் அவன் தான் ஜெயிப்பான்.
Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்
துபை, அல் கிஸஸ் பகுதியில் துப்புரவு பணியாளராக பணியாற்றி வருபவர் 'வினாகத்தர் அமானா மொட்டபட்டோ லால்' (Vinakatar Amana Motabato Lal) என்ற இந்தியர். இவர் தனது பணியின் போது ஒரு பையை கண்டெடுக்கின்றார். அதை திறந்து பார்த்தவருக்கு பேரதிர்ச்சி ஏனெனில் அதனுள்ளே தங்க வைர நகைகள் மின்னிக் கொண்டிருந்தன.
பையை மூடியவர் சலனங்களுக்கு ஆட்படாமல் உடனடியாக அல் கிஸஸ் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். அதனுள்ளே இருந்தது சுமார் 2 லட்சம் திர்ஹம் மதிப்புள்ள தங்க வைர நகைள்.
இந்தியத் தொழிலாளியின் நேர்மையை அங்கீகரிக்கும் விதமாக, அல் கிஸஸ் காவல் நிலைய இயக்குனர் பிரிகேடியர் யூசுப் அல் அதிதி அவர்கள் வினாகத்தர் அமானா மொட்டபட்டோ லாலை காவல் நிலையத்திற்கு நேரில் வரவழைத்து பாராட்டி நற்சான்றிதழும் அன்பளிப்பும் வழங்கி கவுரவித்தார்.
துப்புரவு பணியாளராக இருந்தும் பேராசை கொள்ளாத மனிதனாக நடந்து கொண்ட அந்த சொற்ப வருமான தொழிலாளி வினாகத்தர் அமானா மொட்டபட்டோ லால் அவர்களை சக இந்தியராக நாமும் மனமுவந்து பாராட்டுகின்றோம். நேர்மையாளனுக்கு சோதனைகள் அதிகம் ஆனால் இறுதியில் அவன் தான் ஜெயிப்பான்.
Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.