அதிரை நியூஸ்: ஜன.02
அபுதாபி சவுதி சாலையில் செல்லும் வாகனங்களுக்கான புதிய வேகக்கட்டுப்பாடு அறிவிப்பு.
அமீரகம் மற்றும் சவுதி அரேபியா எல்லைகளை இணைக்கும் அல் மப்ரக் - அல் குவைபத் இடையிலான சர்வதேச நெடுஞ்சாலை (Al Mafraq - Al Ghuwaifat international highway) சமீபத்தில் மேம்படுத்தப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது. ஜனவரி 1 முதல் இச்சாலையில் இலகுரக வாகனங்கள் (Light Vehicles) செல்வதற்கான புதிய வேகக்கட்டுப்பாட்டை அபுதாபி போலீஸ் அறிவித்துள்ளது.
கருணை வேகம் (Grace speed) உட்பட மிக அதிகபட்சமாக இந்த சாலையில் மணிக்கு 140 கி.மீ வேகத்தில் செல்லலாம். மணிக்கு 141 கி.மீ எனும் அளவை எட்டும் போது போக்குவரத்து ரேடார் கேமிராக்களில் சிக்க வேண்டி வரும்.
மிக சமீபத்திய புள்ளி விபரங்களின்படி, சுமார் 1 லட்சம் பேருக்கு 4.4 சதவிகிதம் பேர் சாலை விபத்துக்களில் இறக்கின்றனர். 2017 டிசம்பர் 23 ஆம் தேதி வரை அமீரகம் முழுவதும் 230 பேர் சாலை விபத்துக்களில் இறந்துள்ளனர். இதுவே 2016 ஆம் ஆண்டு 312 பேர் இறந்துள்ளனர் என உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்
அபுதாபி சவுதி சாலையில் செல்லும் வாகனங்களுக்கான புதிய வேகக்கட்டுப்பாடு அறிவிப்பு.
அமீரகம் மற்றும் சவுதி அரேபியா எல்லைகளை இணைக்கும் அல் மப்ரக் - அல் குவைபத் இடையிலான சர்வதேச நெடுஞ்சாலை (Al Mafraq - Al Ghuwaifat international highway) சமீபத்தில் மேம்படுத்தப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது. ஜனவரி 1 முதல் இச்சாலையில் இலகுரக வாகனங்கள் (Light Vehicles) செல்வதற்கான புதிய வேகக்கட்டுப்பாட்டை அபுதாபி போலீஸ் அறிவித்துள்ளது.
கருணை வேகம் (Grace speed) உட்பட மிக அதிகபட்சமாக இந்த சாலையில் மணிக்கு 140 கி.மீ வேகத்தில் செல்லலாம். மணிக்கு 141 கி.மீ எனும் அளவை எட்டும் போது போக்குவரத்து ரேடார் கேமிராக்களில் சிக்க வேண்டி வரும்.
மிக சமீபத்திய புள்ளி விபரங்களின்படி, சுமார் 1 லட்சம் பேருக்கு 4.4 சதவிகிதம் பேர் சாலை விபத்துக்களில் இறக்கின்றனர். 2017 டிசம்பர் 23 ஆம் தேதி வரை அமீரகம் முழுவதும் 230 பேர் சாலை விபத்துக்களில் இறந்துள்ளனர். இதுவே 2016 ஆம் ஆண்டு 312 பேர் இறந்துள்ளனர் என உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.