.

Pages

Tuesday, January 2, 2018

தஞ்சையில் தமிழக ஆளுநர் (படங்கள்)

தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையத்தில் தமிழக ஆளுநர் திரு.பன்வாரிலால் புரோஹித் அவர்கள் தூய்மை இந்தியா இயக்கம் திட்டத்தின் கீழ் முழு சுகாதாரம் தொடர்பாக விழிப்புணர்வு பேரணியை தொடங்கி வைத்து தூய்மை பணியை இன்று (02.01.2018) மேற்கொண்டார்.

தமிழக வேளாண்மைத்துறை அமைச்சர் இரா.துரைக்கண்ணு, தமிழ் ஆட்சி மொழி மற்றும் தமிழ் பண்பாட்டுத்துறை அமைச்சர் கே.பாண்டியராஜன்,  ஆளுநரின் கூடுதல் தலைமைச் செயலர் ஆர்.ராஜகோபால், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலர் ஆர்.வெங்கடேசன், மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை ஆகியோர் கலந்து கொண்டனர்.

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தஞ்சாவூர் குழந்தையம்மாள் நகர், அருளானந்தா நகர் ஆகிய மாநகராட்சி பகுதிகளில் உள்ள வீடுகளில் மக்கும் குப்பை, மக்கா குப்பை, பிளாஸ்டிக் பொருட்கள் போன்றவை தனித்தனித்யாக பிரித்து, பொது மக்கள் மாநகராட்சி துப்புரவு பணியாளர்களிடம் வழங்கப்படுவதை, பொது மக்களிடம் கேட்டறிந்து பார்வையிட்டார்.

தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையத்தில் தனி நபர் இல்ல கழிப்பறை பயன்படுத்துவதனால் ஏற்படும் சுகாதாரம் குறித்து எடுத்துக் கூறி, முழு சுகாதார தமிழகம்-முன்னோடி தமிழகம் என்ற உறுதிமொழியை தமிழக ஆளுநர் அவர்கள் வாசிக்க பொது மக்கள் அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

தூய்மை விழிப்புணர்வு வாகனத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார். பொது மக்களிடம் தனிநபர் இல்லக் கழிப்பறை பயன்படுத்துவதனால் ஏற்படும் நன்மைகள் குறித்து விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கினார்.

இதை தொடர்ந்து பேருந்து நிலையத்தில் தூய்மை விழிப்புணர்வு தொடர்பாக தமிழக ஆளுநர் அவர்கள் தூய்மை செய்து பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். பேருந்து நிலையத்தில் தொடங்கிய விழிப்புணர்வு பேரணி  அன்னை வேளாங்கண்ணி கல்லூரியில் நிறைவடைந்தது.  இப்பேரணியில் ரோட்டரி சங்கம், நேரு யுவகேந்திரா, மகளிர் சுய உதவிக்குழுக்கள் போன்ற அமைப்புகள் சுகாதாரம் தொடர்பான விழிப்புணர்வு பதாகைகள் ஏந்தியவாறும், விழிப்புணர்வு கோஷமிட்டு பேரணியில் கலந்து கொண்டனர்.

தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத்தில் டாக்டர் எம்.ஜி.ஆர் அவர்களின் திருவுருவச் சிலையை திறந்து வைத்தார்.  சுற்றுலா மாளிகையில் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தயார் செய்த தஞ்சாவூர் குறித்த விளக்க தொகுப்பினை பார்வையிட்டார்.

இதை தொடர்ந்து அரண்மனை வளாகத்தில் உள்ள சரஸ்வதி மகால் நூலகத்தில் உள்ள பழங்கால நூல்கள், ஓலைச்சுவடிகள் பார்வையிட்டார்.  பின்னர், திருவையாறில் நடைபெற்ற 171வது தியாகராஜர் ஆராதனை நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

இந்நிகழ்ச்சிகளில் தஞ்சாவூர் பாராளுமன்ற உறுப்பினர் கு.பரசுராமன், ஒருங்கிணைந்த பால் கூட்டுறவு சங்கத் தலைவர் காந்தி, கூட்டுறவு ஒன்றிய தலைவர் மோகன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டி.செந்தில்குமார்,  மாவட்ட வருவாய் அலுவலர் ந.சக்திவேல், பயிற்சி ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமர், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மந்திராசலம், மாநகராட்சி ஆணையர் மு.வரதராஜ், வருவாய் கோட்டாட்சியர் சுரேஷ், உதவி இயக்குநர்கள் முருகேசன் (ஊராட்சிகள்), இளங்கோவன் (பேரூராட்சிகள்) மற்றும் உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.