பட்டுக்கோட்டை-காரைக்குடி இடையே 74 கி.மீ. அகல ரயில் பாதை பணிகள் 95 சதவீதம் முடிந்த நிலையில், ரயில்கள் இயக்குவது குறித்து அறிவிப்பு நிகழாண்டிலாவது வெளியிடப்படுமா என்று பயணிகள் எதிர்பார்த்துள்ளனர்.
ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் பர்மாவில் வணிகம் செய்து வந்த காரைக்குடி, தேவகோட்டை உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்தவர்களின் முயற்சியால் சவுத் இந்தியன் ரயில் கம்பெனி மூலம் காரைக்குடியில் இருந்து திருவாரூர் வரை (திருவாரூரில் இருந்து சென்னைக்கு அதற்கு முன்பே ரயில் வழித்தடம் இருந்தது) 149 கிலோ மீட்டர் தொலைவுக்கு மீட்டர்கேஜ் ரயில்பாதை அமைக்கப்பட்டது.
இந்த வழித்தடத்தில் கண்டனூர் - புதுவயல், அறந்தாங்கி, பேராவூரணி, பட்டுக்கோட்டை, திருத்துறைப்பூண்டி உள்பட பல்வேறு ஊர்களில் ரயில் நிலையங்கள் கட்டப்பட்டன. இந்த ரயில் பாதையில் 1902ஆம் ஆண்டு அக்டோபர் 20ஆம் தேதி முதல் ரயில்கள் இயக்கப்பட்டன.
இந்நிலையில், நாடு முழுதும் மீட்டர்கேஜ் ரயில் பாதைகள் அகல பாதைகளாக மாற்றம் செய்யப்பட்ட நிலையில், திருவாரூர் முதல் காரைக்குடி வரையிலான 149 கிலோ மீட்டர் தொலைவிலான மீட்டர்கேஜ் ரயில்பாதையை அகல பாதையாக மாற்றுவதற்காக 2012 ஆம் ஆண்டு மார்ச் மாதம் காரைக்குடி - திருவாரூர் ரயில் போக்குவரத்து முற்றிலுமாக நிறுத்தப்பட்டு, அமைப்பு பணிகள் தொடங்கப்பட்டன.
இதில், முதல்கட்டமாக பட்டுக்கோட்டை முதல் காரைக்குடி வரையிலான 74 கிலோ மீட்டருக்கு அகல பாதை அமைக்கவும், ரயில் நிலையங்களை மேம்படுத்தவும், பாலங்கள் அமைக்கவும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பட்டுக்கோட்டை முதல் பேராவூரணி வரை, பேராவூரணி முதல் ஆயிங்குடி வரை, அங்கிருந்து அறந்தாங்கி வரை, அங்கு தொடங்கி காரைக்குடி வரை என 4 பிரிவுகளாக அகல ரயில்பாதை பணிகள் நடைபெற்றன. இந்த பாதையில் 14 பெரிய பாலங்கள், 168 சிறிய பாலங்கள், சுமார் 35 லெவல் கிராசிங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் அறந்தாங்கி, பேராவூரணி, பட்டுக்கோட்டை உள்ளிட்ட இடங்களில் நவீன வசதிகளுடன் ரயில் நிலையங்கள் மேம்படுத்தப்பட்டுள்ளது
தற்போது ரயில்வே நிர்வாகத்தின் சார்பில், பட்டுக்கோட்டை, பேராவூரணி, அறந்தாங்கி பகுதிகளில் தண்டவாளங்களின் உறுதித்தன்மை, இரு தண்டவாளங்களின் இணைப்புகள் போன்றவை அதிநவீன வசதிகள் கொண்ட என்ஜின் மூலம் ரயில்வே அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். 95 சதவீதம் பணிகள் முடிந்துள்ளன.
2012 ஆம் ஆண்டு ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டபோது, காரைக்குடி - திருவாரூர் ரயில் போக்குவரத்து 3 ஆண்டுகளில் மீண்டும் தொடங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் மத்தியில் ஆட்சிமாற்றம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் நிதி ஒதுக்கீடு செய்வதில் தாமதம் திட்ட மதிப்பீட்டைவிட கால தாமதத்தால் செலவு உயர்ந்ததாலும் அமைப்புப் பணிகளில் தொய்வு ஏற்பட்டது.
இந்நிலையில், முதல்கட்டமாக பட்டுக்கோட்டை -காரைக்குடி போக்குவரத்தை தொடங்கி காரைக்குடியிலிருந்து புதுக்கோட்டை வழியாக திருச்சி, சென்னை செல்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே, நிகழாண்டிலாவது பட்டுக்கோட்டை -காரைக்குடி போக்குவரத்து தொடங்கப்படும் தேதியை ரயில்வே துறை அறிவிக்க வேண்டுமென பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.