.

Pages

Tuesday, January 2, 2018

சவுதியில் திருமணம் செய்து கொள்ளும் வெளிநாட்டினருக்கும் சவுதிகளுக்கு உள்ள சலுகை தரப்பட்டது

அதிரை நியூஸ்: ஜன.02
சவுதியில் திருமணம் செய்து கொள்ளும் வெளிநாட்டினருக்கும் சவுதிகளுக்கு உள்ள சலுகை தரப்பட்டது

சவுதி அரேபியாவில் திருமணம் செய்து கொள்ளும் வெளிநாட்டு மணமக்கள் முன்பு நீதிமன்றங்களுக்குச் சென்று தான் திருமணம் செய்து கொள்ள முடியும் அதேவேளை சவுதி அரேபியர்கள் தங்கள் வீடுகளிலேயே முறைப்படி திருமணம் செய்து கொண்டு அதற்குரிய ஒப்பந்தப் பத்திரங்களை பூர்த்தி செய்து முறையாக பதிவு செய்தால் போதுமானது.

வெளிநாட்டு மணமக்களுக்கான புதிய சலுகையின்படி, இனி சவுதி அரேபியர்களைப் போல் வீட்டிலிருந்தவாறே முறைப்படி திருமணம் செய்து கொண்டு அந்த திருமண ஒப்பந்தப் பத்திரங்களை பூர்த்தி செய்து பதிவு செய்து கொள்ளலாம் என சலுகை வழங்கப்பட்டுள்ளதை அடுத்து முதலாவது திருமணம் ஒன்று ஜித்தா மாநகரில் நடந்தேறியது. அத்திருமணத்தின் ஒப்பந்தப் பத்திரத்தின் நகல்கள் வைரலாக சமூக தளங்களில் வலம் வருகிறது.

முந்தைய நடைமுறைப்படி, சவுதிக்குள் திருமணம் செய்து கொள்ளும் வெளிநாட்டு மணமக்கள் நீதிமன்றத்தில் விண்ணப்பம் செய்துவிட்டு திருமண அப்பாயிண்மெட்டுக்காக நீண்டநாட்கள் காத்திருக்கும் நிலை நிலவி வந்தது இத்துடன் முற்றுப்பெற்றுள்ளது. அதேபோல் நீதிமன்றங்களும் வேறு பணிகளில் கவனம் செலுத்த முடியும்.

அதேவேளை சவுதியர்களுக்கும் வெளிநாட்டவர்களுக்கும் இடையே நடைபெறும் கலப்புத் திருமணங்கள் மட்டும் 2016 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட சவுதி அரசின் சட்டத்தின் வழிமுறைப்படி நடைபெறுகிறதா என்பதை கண்காணிப்பதற்காக நீதிமன்றங்கள் வழியாகவே தொடர்ந்து நடைபெறும் எனவும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.