பேராவூரணி ஜன.20
நபிகள் நாயகத்தை சீண்டிப்பார்த்து முஸ்லீம்களை வம்புக்கு இழுக்கும் பாஜக தேசியச் செயலாளர் எச்.ராஜாவை குண்டர் சட்டத்தில் கைது செய்யவேண்டும் என வலியுறுத்தி, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை தெற்கு மாவட்டத்தின் சார்பில் சனிக்கிழமை மாலை பேராவூரணி அண்ணாசிலை அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் ஜே.சேக்தாவூத் தலைமை வகித்தார். மாவட்ட துணைத்தலைவர் அதிரை ராஜிக் அகமது முன்னிலை வகித்தார். இக்கூட்டத்தில் டிஎன்டிஜே மாநில துணைப் பொதுச்செயலாளர் எம்.தவ்ஃபீக் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட பொருளாளர் வல்லம் ஜாஃபர், மாவட்ட துணைச்செயலாளர் பாட்சா மற்றும் பல்வேறு கிளை நிர்வாகிகள் மற்றும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இஸ்லாமிய ஆண்கள், பெண்கள் கலந்து கொண்டனர். ஆண்டாள் குறித்து சர்ச்சையான கருத்தை சொன்னதாக கவிஞர் வைரமுத்துவை கண்டித்து பேசிய, பாஜக தேசியச் செயலாளர் எச்.ராஜா, அப்பொழுது முஸ்லீம்கள் உயர்வாக மதிக்கும் முகமது நபி மற்றும் அவரது குடும்பத்தாரை தேவையின்றி இழிவாக பேசியதாக கூறி அதனைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
ஆர்ப்பாட்டத்தையொட்டி பட்டுக்கோட்டை டிஎஸ்பி செங்கமலக்கண்ணன் தலைமையில் பலத்த காவல்துறை பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.
நபிகள் நாயகத்தை சீண்டிப்பார்த்து முஸ்லீம்களை வம்புக்கு இழுக்கும் பாஜக தேசியச் செயலாளர் எச்.ராஜாவை குண்டர் சட்டத்தில் கைது செய்யவேண்டும் என வலியுறுத்தி, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை தெற்கு மாவட்டத்தின் சார்பில் சனிக்கிழமை மாலை பேராவூரணி அண்ணாசிலை அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் ஜே.சேக்தாவூத் தலைமை வகித்தார். மாவட்ட துணைத்தலைவர் அதிரை ராஜிக் அகமது முன்னிலை வகித்தார். இக்கூட்டத்தில் டிஎன்டிஜே மாநில துணைப் பொதுச்செயலாளர் எம்.தவ்ஃபீக் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட பொருளாளர் வல்லம் ஜாஃபர், மாவட்ட துணைச்செயலாளர் பாட்சா மற்றும் பல்வேறு கிளை நிர்வாகிகள் மற்றும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இஸ்லாமிய ஆண்கள், பெண்கள் கலந்து கொண்டனர். ஆண்டாள் குறித்து சர்ச்சையான கருத்தை சொன்னதாக கவிஞர் வைரமுத்துவை கண்டித்து பேசிய, பாஜக தேசியச் செயலாளர் எச்.ராஜா, அப்பொழுது முஸ்லீம்கள் உயர்வாக மதிக்கும் முகமது நபி மற்றும் அவரது குடும்பத்தாரை தேவையின்றி இழிவாக பேசியதாக கூறி அதனைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
ஆர்ப்பாட்டத்தையொட்டி பட்டுக்கோட்டை டிஎஸ்பி செங்கமலக்கண்ணன் தலைமையில் பலத்த காவல்துறை பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.