.

Pages

Saturday, January 20, 2018

கும்பகோணத்தில் தொழிலாளர் நீதிமன்றம் புதிதாக திறப்பு !

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில் தொழிலாளர் நீதிமன்றத்தினை சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர் என்.சதீஸ்குமார் அவர்களால்  இன்று (20.01.2018) சனிக்கிழமை திறந்து வைக்கப்பட்டது.

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் (20.01.2018) இன்று காலை 10.35 மணியளவில், தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் நாகப்பட்டிணம் மாவட்டங்களின் ஆளுகைக்குட்பட்ட தொழில் தகராறு, தொழிலாளர்கள் ஊதியம் மற்றும் தொழிலாளர்கள் பணி சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் குறித்த வழக்குகளை விசாரித்து தீர்ப்பதற்காக தொழிலாளர் நீதிமன்றம் சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர்கள் வி.பாரதிதாசன், எஸ்.எஸ்.சுந்தர், ஆர்.சுப்பிரமணியன், வி. பவானி சுப்புராயன் ஆகியோர் முன்னிலையில் தஞ்சாவூர் மாவட்ட நீதிமன்றங்கள் நிர்வாக பொறுப்பு வகிக்கும் சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர் என்.சதீஸ்குமார் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. தஞ்சாவூர் முதன்மை மாவட்ட நீதிபதி ஏ.ஏ.நக்கீரன் அவர்கள் வரவேற்புரை ஆற்றினார். தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை, தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டி.செந்தில்குமார் மற்றும் கும்பகோணம் வழக்கறிஞர்கள் சங்க தலைவர் எம்.ராஜசேகர், செயலாளர் என்.செந்தில்நாதன் ஆகியோர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

இவ்விழாவில் தஞ்சாவூர் மாவட்ட அனைத்து நீதிமன்ற நீதிபதிகள், வழக்கறிஞர்கள், நீதித்துறை ஊழியர்கள் வழக்கறிஞர்கள், எழுத்தர்கள் மற்றும் வழக்காடிகள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். தஞ்சாவூர் மாவட்ட தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் வீ.தேன்மொழி நன்றியுரை ஆற்றினார்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.