பேராவூரணி ஜூன்.04
பேராவூரணி ஒன்றியம் ஊராட்சி ஒன்றியம் பெரியதெற்குக்காடு நடுநிலைப்பள்ளியில் மாணவர்களை சேர்க்கும் பெற்றோருக்கு ரூ 1000 அன்பளிப்பாக வழங்கப்பட்டது.
அரசுப்பள்ளியில் மாணவர்களை சேர்ப்பதை ஊக்குவிக்கும் விதமாக கிராமத்தினர், ஆசிரியர்கள் பங்களிப்போடு, ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை சேரும் மாணவர்களின் பெற்றோருக்கு தலா ரூ 1000 வழங்கலாம் என பெற்றோர் ஆசிரியர் கழக கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
இதையடுத்து திங்கள்கிழமை அன்று பள்ளியில் ஒன்றாம் வகுப்பில் சேர்ந்த 2 பேர், 6 ஆம் வகுப்பில் சேர்ந்த 3 பேர் ஆக 5 பேரின் பெற்றோருக்கு தலா ரூ 1000 வீதம் ஊக்கப்பரிசாக ரூ 5 ஆயிரம் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர் வேலம்மாள், பெற்றோர் ஆசிரியர் தலைவர் முருகேசன், அன்னையர் குழு உறுப்பினர் ஜெயா, பள்ளி ஆசிரியர்கள் ஜெயந்தி,ரஞ்சிதா, குளோரி மற்றும் சிவலிங்கம், அம்பிகாபதி, முத்துவேல், மற்றும் சுற்றுச்சூழல் மன்ற ஒருங்கிணைப்பாளர் ஆசிரியர் இராமநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
பேராவூரணி ஒன்றியம் ஊராட்சி ஒன்றியம் பெரியதெற்குக்காடு நடுநிலைப்பள்ளியில் மாணவர்களை சேர்க்கும் பெற்றோருக்கு ரூ 1000 அன்பளிப்பாக வழங்கப்பட்டது.
அரசுப்பள்ளியில் மாணவர்களை சேர்ப்பதை ஊக்குவிக்கும் விதமாக கிராமத்தினர், ஆசிரியர்கள் பங்களிப்போடு, ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை சேரும் மாணவர்களின் பெற்றோருக்கு தலா ரூ 1000 வழங்கலாம் என பெற்றோர் ஆசிரியர் கழக கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
இதையடுத்து திங்கள்கிழமை அன்று பள்ளியில் ஒன்றாம் வகுப்பில் சேர்ந்த 2 பேர், 6 ஆம் வகுப்பில் சேர்ந்த 3 பேர் ஆக 5 பேரின் பெற்றோருக்கு தலா ரூ 1000 வீதம் ஊக்கப்பரிசாக ரூ 5 ஆயிரம் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர் வேலம்மாள், பெற்றோர் ஆசிரியர் தலைவர் முருகேசன், அன்னையர் குழு உறுப்பினர் ஜெயா, பள்ளி ஆசிரியர்கள் ஜெயந்தி,ரஞ்சிதா, குளோரி மற்றும் சிவலிங்கம், அம்பிகாபதி, முத்துவேல், மற்றும் சுற்றுச்சூழல் மன்ற ஒருங்கிணைப்பாளர் ஆசிரியர் இராமநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.