.

Pages

Monday, June 4, 2018

ஒட்டிப்பிறந்து வாழ்ந்த 22 வயது இரட்டையர்கள் மாரடைப்பால் மரணம்!

அதிரை நியூஸ்: ஜூன் 04
ஒட்டிப்பிறந்து வளர்ந்த தான்சானியா நாட்டைச் சேர்ந்த 22 வயது  இரட்டையர்கள் மாரடைப்பால் மரணம்.

தான்சானியா எனும் ஆப்பிரிக்கா நாட்டில் ஒட்டிப் பிறந்து வளர்ந்த இரட்டை பெண்கள் 22 வயதில் மாரடைப்பால் மரணமடைந்தனர். பல்வேறு சோகங்களை சாதனைகளையும் லட்சியங்களையும் கொண்டிருந்த இந்த இளம் பெண்கள் தாங்கள் பிரிக்கப்படுவதை ஒருபோதும் விரும்பியதில்லை ஆனால் தாங்கள் இருவரும் ஒருநாளட ஒரே கணவருக்கு வாழ்க்கைப்பட்டு வாழ்வோம் என நம்பியிருந்தனர்.

இளம் வயதிலேயே பெறறோர்களை இழந்துவிட்ட இவர்களை Catholic charity Maria Consolata  என்றதொரு கிருஸ்தவ தொண்டு நிறுவனமே எடுத்து வளர்த்ததால் அவர்கள் இருவருக்கும் Maria & Consolata என்ற பெயர்களே வைக்கப்பட்டன. அவர்கள் இருவரும் ஒற்றை ஈரல் மற்றும் நுரையீரலை பகிர்ந்து கொண்டிருந்தனர். தனித்தனி தலைகளுடன் கைகளும் தனித்து இருந்துள்ளது.

மேல்நிலை பள்ளிப்படிப்பை வெற்றிகரமாக கடந்துள்ள இவர்கள் எதிர்காலத்தில் பட்டப்படிப்புக்குப் பின் ஆசிரியை ஆகி கம்ப்யூட்டர் மற்றும் புரோஜெக்டர் வழியாக மாணவர்களுக்கு பாடம் நடத்தவும் ஆசைப்பட்டனர். இவர்களுக்கு அரசின் உதவியும் தனியார்களின் நன்கொடை உதவியும் கிடைத்து வந்ததுடன் தான்சானியா மக்கள் அனைவரின் அன்பிற்கும் உரியவர்களாகவும் திகழ்ந்திருந்தனர்.

இவர்களது மரணத்திற்கு தான்சானிய பள்ளிக்கூடங்கள் அனைத்தும் இரங்கல் தெரிவித்துள்ளதுடன் அந்நாட்டின் ஜனாதிபதியும் இரங்கல் தெரிவித்துள்ளார். பொதுமக்களும் தங்களின் துயரங்களை பகிர்ந்து கொண்டுள்ளனர்.

Source: BBC / Msn
தமிழில்: நம்ம ஊரான் 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.