.

Pages

Thursday, June 14, 2018

புனித மக்கா ஹரம் ஷரீஃபில் 'கத்தம்~அல் குர்ஆன்' தினத்தன்று 2 மில்லியன் மக்கள் குவிந்தனர்!

அதிரை நியூஸ்: ஜூன் 14
புனித மக்காவின் ஹரம் ஷரீஃபில் கத்தம் அல் குர்ஆன் தினத்தன்று 2 மில்லியன் மக்கள் குவிந்தனர்

புனித ரமலான் மாதத்தின் கடைசி 29 ஆம் இரவு மற்றும் லைலத்துல் கத்ரு இரவை தேடுகின்ற ஒரு இரவாகவும் திகழ்ந்த நேற்றைய இரவுத் தொழுகையின் போது கடந்த ஒரு மாத காலமாக ஓதப்பட்டு வந்த திருக்குர்ஆன் நேற்றைய இரவுத் தொழுகையுடன் முடித்து வைக்கப்பட்டது.

திருக்குர்ஆனை முழுமையாக இந்த ஒரு மாதம் முழுவதும் ஓதி நேற்றுடன் முடித்து வைக்கும் இந்நிகழ்வே 'கத்தம் அல் குர்ஆன்' (Khatm-Al-Quran) என அழைக்கப்படுகிறது. (கத்தம் என்றால் நிறைவு செய்தல், முடித்து வைத்தல் என்று அர்த்தம். ஹத்தம் என்று நமது நாடுகளில் நடத்தப்படுகிற பித்அத்திற்கும் இதற்கும் சம்பந்தமில்லை)

இந்த வருட ரமலான் மாதத்தின் இறுதி இரவாக இருக்கலாம் என்று கருதப்படுகின்ற நிலையில் சவுதியின் உள்நாட்டு யாத்ரீகர்கள் உட்பட உலகெங்கிலுமிருந்து யாத்ரீகர்கள் சுமார் 20 லட்சம் பேர் புனித கஃபத்துல்லாஹ் உடைய ஹரம் ஷரீஃபில் குவிந்து வணக்க வழிபாடுகளில் ஈடுபட்டனர். யாத்ரீகர்களுக்கான பாதுகாப்பு உள்ளிட்ட இதர வசதிகள் அனைத்தையும் இரு புனிதப் பள்ளிகளின் நிர்வாகத் தலைமையகத்தின் ஒருங்கிணைப்பின் கீழ் சிறப்புடன் செய்யப்பட்டிருந்தது.

Source: Saudi Gazette
தமிழில்: நம்ம ஊரான் 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.