.

Pages

Tuesday, June 5, 2018

கத்தார் நாட்டு பிரஜைகள் புனித ரமலானில் உம்ரா செய்ய சவுதி அனுமதி!

அதிரை நியூஸ்: ஜூன் 05
கடந்த ஆண்டு ரமலான் முதல் கத்தாருக்கு எதிராக தங்களது ராஜிய உறவுகளை சவுதி, அமீரகம், எகிப்து ஆகிய நாடுகள் முற்றிலும் முறித்துக் கொண்டன, மேலும் சில நாடுகள் இவற்றை ஆதரித்தன. இதனால் இருபுறமும் உள்ள மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன் ஹஜ், உம்ரா போன்ற வணக்க வழிபாடுகளை நிறைவேற்றுவதற்கும் பல்வேறு சிக்கல்கள் நிலவுகின்றன.

இந்நிலையில் கத்தார் நாட்டு பிரஜைகள் விரும்பினால் உம்ராவுக்கு வரலாம் என சவுதி அரேபியாவின் ஹஜ் மற்றும் உம்ராவிற்கான அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது. விருப்பப்படுபவர்கள் https://eservices.Hajj.gov.sa/eservices3 என்ற ஆன்லைன் தளத்திற்குள் சென்று சவுதியிலிருந்து உம்ரா சேவைகளை வழங்கும் ஏதாவது ஒரு நிறுவனத்தின் வழியாக முன்பதிவு செய்து விருப்பமுள்ள உம்ரா சர்வீஸ் பேக்கேஜ்களை தேர்வு செய்து கொண்டு வரலாம்.

கத்தார் நாட்டு மக்கள் ஜித்தா விமான நிலையத்தின் வழியாக மட்டும் எந்த நாட்டு விமானத்திலும் வந்திறங்கலாம் கத்தார் ஏர்லைனஸ் விமானத்தை தவிர என்றும் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

Source: Arab News
தமிழில்: நம்ம ஊரான் 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.