.

Pages

Friday, June 1, 2018

கல்லூரி முதல்வர் பொறுப்பேற்பு!

பேராவூரணி ஜூன்.01-
பேராவூரணி அரசு கலை அறிவியல் கல்லூரியின் (இருப்பு - முடச்சிக்காடு) புதிய முதல்வராக முனைவர் வெ.செந்தமிழ் செல்வி வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டார்.

இவர் இதற்கு முன்பு தஞ்சாவூர் குந்தவை நாச்சியார் அரசு கல்லூரியில் இயற்பியல் துறை பேராசிரியராக பல ஆண்டுகள் பணியாற்றி உள்ளார். புதிதாக பொறுப்பேற்ற கல்லூரி முதல்வரை, பேராசிரியர்கள் ராணி, பழனிவேலு, மற்றும் பேராசிரியர்கள், அலுவலக பணியாளர் சாமிநாதன் மற்றும் மாணவ, மாணவிகள் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.

முனைவர் வெ.செந்தமிழ் செல்வி கூறுகையில், " வரும் ஜூன் 4  ஆம் தேதி அன்று காலை 11 மணிக்கு  முதல்கட்டமாக அனைத்து பாடப் பிரிவுகளுக்கான மாணவர் சேர்க்கை  கலந்தாய்வு நடைபெறும். அன்றைய தினமே இரண்டாம் கட்ட கலந்தாய்வு தேதி அறிவிக்கப்படும். கலந்தாய்வுக்கு வரும் மாணவ, மாணவியர் மதிப்பெண் பட்டியல், சாதி சான்று, மாற்றுச் சான்றிதழுடன் வரவேண்டும். தேர்வு செய்யப்படுவோர் கல்லூரி கல்விக்கட்டணத்தை செலுத்த தயாராக வரவேண்டும். அரசு விதிமுறைப்படி மாணவர் சேர்க்கை கலந்தாய்வு நடைபெறும்" என்றார்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.