வாக்காளர் பட்டியல் திருத்தப்பணி நடைபெறுவது குறித்து பொது மக்களுக்கு தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரின் அறிவிப்பு
இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளவாறு, தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள 8 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்காளர் பட்டியலில் காணப்படும் குறைகளைக் களையவும் தகுதியுடைய விடுபட்ட வாக்காளர்களை வாக்காளர் பட்டியலில் இடம்பெறச் செய்ய தொடர்புடைய வாக்குச்சாவடி நிலை அலுவலர்களை ஒவ்வொரு வீடாக சென்று கள ஆய்வுபணி மேற்கொள்ளுமாறு அறிவுரை வழங்கப்பட்டு கள ஆய்வு பணி நடைபெற்று வருகிறது.
தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள 2175 வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கும் வாக்காளர்களின் விபரங்கள் அடங்கிய பதிவேடு அச்சடித்து வழங்கப்பட்டுள்ளது, வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் அவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள பகுதிகளில் உள்ள ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று வாக்காளர் பட்டியலில் அனைவரது பெயர்களும் விடுபடாமல் சரியாக இடம்பெற்றுள்ளதா என்பதையும் குடும்ப உறுப்பினர்கள் பெயர்கள் வெவ்வேறு இடங்களில் இல்லாமல் ஒரே பாகத்தில் வரிசையாக ஒன்றன் பின் ஒன்றாக இடம்பெற்றுள்ளதா என்பதையும் சரிபார்க்கும் பணி மேற்கொண்டு வருகிறார்கள்.
மேலும். இக்கள ஆய்வுப் பணியின்போது வாக்காளர் பட்டியலில் விடுபட்ட மாற்றுத்திறனாளி மற்றும் மூன்றாம் பாலின வாக்காளர்களின் பெயர்களையும் வாக்காளர் பட்டியலில் சேர்த்திட தொடர் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது,
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பொது மக்கள் அனைவரும் த’;கள் வீட்டிற்கு வாக்குச்சாவடி நிலை அலுவலர் வருகைதரும்போது வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயர் விடுபட்டிருந்தாலோ அல்லது குடும்ப உறுப்பினர்கள் பெயர் வாpசையாக ஒன்றன் பின் ஒன்றhக இல்லாமல் வேறு பாகத்தில் இடம் பெற்றிருந்தாலோ அல்லது பெயர். முகவரி ஆகியவற்றில் திருத்தம் ஏதும் மேற்கொள்ளவேண்டியிருந்தாலோ அக்குறைபாடுகளை அவர்களிடம் தெரிவித்து சரி செய்து கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
ஆண்டு முழுவதும் வாக்காளர் பட்டியலில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவரும் தங்களது பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்த்துக் கொள்ளலாம், அதனடிப்படையில் தற்போது 01-01-2018ஐ தகுதி நாளாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்டுவரும் இத்தொடர் திருத்தப்பணியில் 18 வயது நிரம்பிய ஆண், பெண் இருபாலரும் அதாவது 02-01-2000க்கு முன்னர் பிறந்தவர்கள் அனைவரும் தங்கள் பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்த்திட விண்ணப்பிக்கலாம், அத்துடன் தங்கள் வீட்டிற்கு அருகாமையில் வசித்தவர்கள் யாரேனும் குடிபெயர்ந்து சென்றிருந்தாலோ அல்லது இறந்திருந்தாலோ அவ்விபரத்தினைத் தங்கள் வீட்டிற்கு வரும் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம் தெரிவிக்கலாம்.
வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்க்க படிவம் 6, வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் படிவம் 6A, பெயர் நீக்கம் செய்திட படிவம் 7, பெயர். முகவரி ஆகியவற்றில் திருத்தங்கள் மேற்கொண்டிட மற்றும் கருப்பு வெள்ளை புகைப்படத்தை வண்ண புகைப்படமாக மாற்றம் செய்ய படிவம் 8, ஒரே தொகுதிக்குள் முகவரி மாற்றம் செய்திட படிவம் 8A ப் பெற்று, பூர்த்தி செய்து உரிய சான்றாவணங்களுடன் தொடர்புடைய வாக்குச்சாவடி நிலை அலுவலரிடமே அளிக்கலாம். இக்கள ஆய்வு பணியானது வருகிற 20-06-2018 வரை தொடர்ந்து நடைபெறும் என தெரிவிக்கப்படுகிறது.
மேற்காணும் விபரப்படி வாக்காளர்களிடமிருந்து பெறப்படும் விண்ணப்பங்கள் மீது தொடர்புடைய வாக்காளர் பதிவு அலுவலர் ( நுடநஉவடிசயட சுநபளைவசயவiடிn டீககiஉநச ) உரிய ஒப்பளிப்பு ஆணை பிறப்பித்த பின்னர் வாக்காளர் பட்டியலில் வாக்காளர்களின் பெயர் இடம் பெறும்;, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்பட்ட பின்னர் அருகாமையில் உள்ள அரசு இ-சேவை மையம் மூலம் வாக்காளர்களுக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்பட்டு வருகிறது.
எனவே, தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள வாக்காளர்கள் தங்கள் பெயர் தவறு ஏதுமின்றி வாக்காளர் பட்டியலில் சாpயாக இடம் பெற்றுள்ளதா என்பதை சரிபார்த்திடவும், தவறு ஏதுமிருப்பின் அவற்றை உரிய படிவத்தில் பூர்த்தி செய்து தேவைப்படும் சான்றாவணங்களுடன் தொடர்புடைய வாக்குச்சாவடி அலுவலர்களிடம் வழங்கி நிவர்த்தி செய்து கொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 18 வயது பூர்த்தியடைந்தவர்கள் தங்கள் பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்க்க, நேரடியாக படிவம் 6 பூர்த்தி செய்து அளிக்க இயலாவிட்டால். டீடேiநேடூ மூலமாகவும் விண்ணப்பிக்கலாம். டீடேiநேடூமு்லம் விண்ணப்பிக்க வேண்டிய இணையதள முகவரி றாற.நடநஉவiடிளே.வn.படிஎ.in
இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளவாறு, தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள 8 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்காளர் பட்டியலில் காணப்படும் குறைகளைக் களையவும் தகுதியுடைய விடுபட்ட வாக்காளர்களை வாக்காளர் பட்டியலில் இடம்பெறச் செய்ய தொடர்புடைய வாக்குச்சாவடி நிலை அலுவலர்களை ஒவ்வொரு வீடாக சென்று கள ஆய்வுபணி மேற்கொள்ளுமாறு அறிவுரை வழங்கப்பட்டு கள ஆய்வு பணி நடைபெற்று வருகிறது.
தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள 2175 வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கும் வாக்காளர்களின் விபரங்கள் அடங்கிய பதிவேடு அச்சடித்து வழங்கப்பட்டுள்ளது, வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் அவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள பகுதிகளில் உள்ள ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று வாக்காளர் பட்டியலில் அனைவரது பெயர்களும் விடுபடாமல் சரியாக இடம்பெற்றுள்ளதா என்பதையும் குடும்ப உறுப்பினர்கள் பெயர்கள் வெவ்வேறு இடங்களில் இல்லாமல் ஒரே பாகத்தில் வரிசையாக ஒன்றன் பின் ஒன்றாக இடம்பெற்றுள்ளதா என்பதையும் சரிபார்க்கும் பணி மேற்கொண்டு வருகிறார்கள்.
மேலும். இக்கள ஆய்வுப் பணியின்போது வாக்காளர் பட்டியலில் விடுபட்ட மாற்றுத்திறனாளி மற்றும் மூன்றாம் பாலின வாக்காளர்களின் பெயர்களையும் வாக்காளர் பட்டியலில் சேர்த்திட தொடர் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது,
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பொது மக்கள் அனைவரும் த’;கள் வீட்டிற்கு வாக்குச்சாவடி நிலை அலுவலர் வருகைதரும்போது வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயர் விடுபட்டிருந்தாலோ அல்லது குடும்ப உறுப்பினர்கள் பெயர் வாpசையாக ஒன்றன் பின் ஒன்றhக இல்லாமல் வேறு பாகத்தில் இடம் பெற்றிருந்தாலோ அல்லது பெயர். முகவரி ஆகியவற்றில் திருத்தம் ஏதும் மேற்கொள்ளவேண்டியிருந்தாலோ அக்குறைபாடுகளை அவர்களிடம் தெரிவித்து சரி செய்து கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
ஆண்டு முழுவதும் வாக்காளர் பட்டியலில் 18 வயது பூர்த்தியடைந்த அனைவரும் தங்களது பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்த்துக் கொள்ளலாம், அதனடிப்படையில் தற்போது 01-01-2018ஐ தகுதி நாளாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்டுவரும் இத்தொடர் திருத்தப்பணியில் 18 வயது நிரம்பிய ஆண், பெண் இருபாலரும் அதாவது 02-01-2000க்கு முன்னர் பிறந்தவர்கள் அனைவரும் தங்கள் பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்த்திட விண்ணப்பிக்கலாம், அத்துடன் தங்கள் வீட்டிற்கு அருகாமையில் வசித்தவர்கள் யாரேனும் குடிபெயர்ந்து சென்றிருந்தாலோ அல்லது இறந்திருந்தாலோ அவ்விபரத்தினைத் தங்கள் வீட்டிற்கு வரும் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம் தெரிவிக்கலாம்.
வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்க்க படிவம் 6, வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் படிவம் 6A, பெயர் நீக்கம் செய்திட படிவம் 7, பெயர். முகவரி ஆகியவற்றில் திருத்தங்கள் மேற்கொண்டிட மற்றும் கருப்பு வெள்ளை புகைப்படத்தை வண்ண புகைப்படமாக மாற்றம் செய்ய படிவம் 8, ஒரே தொகுதிக்குள் முகவரி மாற்றம் செய்திட படிவம் 8A ப் பெற்று, பூர்த்தி செய்து உரிய சான்றாவணங்களுடன் தொடர்புடைய வாக்குச்சாவடி நிலை அலுவலரிடமே அளிக்கலாம். இக்கள ஆய்வு பணியானது வருகிற 20-06-2018 வரை தொடர்ந்து நடைபெறும் என தெரிவிக்கப்படுகிறது.
மேற்காணும் விபரப்படி வாக்காளர்களிடமிருந்து பெறப்படும் விண்ணப்பங்கள் மீது தொடர்புடைய வாக்காளர் பதிவு அலுவலர் ( நுடநஉவடிசயட சுநபளைவசயவiடிn டீககiஉநச ) உரிய ஒப்பளிப்பு ஆணை பிறப்பித்த பின்னர் வாக்காளர் பட்டியலில் வாக்காளர்களின் பெயர் இடம் பெறும்;, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்பட்ட பின்னர் அருகாமையில் உள்ள அரசு இ-சேவை மையம் மூலம் வாக்காளர்களுக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்பட்டு வருகிறது.
எனவே, தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள வாக்காளர்கள் தங்கள் பெயர் தவறு ஏதுமின்றி வாக்காளர் பட்டியலில் சாpயாக இடம் பெற்றுள்ளதா என்பதை சரிபார்த்திடவும், தவறு ஏதுமிருப்பின் அவற்றை உரிய படிவத்தில் பூர்த்தி செய்து தேவைப்படும் சான்றாவணங்களுடன் தொடர்புடைய வாக்குச்சாவடி அலுவலர்களிடம் வழங்கி நிவர்த்தி செய்து கொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 18 வயது பூர்த்தியடைந்தவர்கள் தங்கள் பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்க்க, நேரடியாக படிவம் 6 பூர்த்தி செய்து அளிக்க இயலாவிட்டால். டீடேiநேடூ மூலமாகவும் விண்ணப்பிக்கலாம். டீடேiநேடூமு்லம் விண்ணப்பிக்க வேண்டிய இணையதள முகவரி றாற.நடநஉவiடிளே.வn.படிஎ.in
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.