தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்ட அரங்கில் தென்மேற்கு பருவ மழை முன்னேற்பாடு பணிகள் குறித்து அனைத்துத் துறை அலுவலர்களுடன் ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை தலைமையில் இன்று (01.06.2018) நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை தெரிவித்ததாவது;
தென்மேற்கு பருவ மழை தொடங்கவுள்ளதையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஒவ்வொரு துறைக்கும் ஒதுக்கப்பட்டுள்ள பணிகளை திறம்பட செய்து முடிக்க வேண்டும். தென்மேற்கு பருவ மழையின் போது, பொது மக்கள் வெள்ள சேதம் தொடர்பாக மாவட்ட நிர்வாகத்திற்கு கட்டணமில்லா தொலைபேசி எண் 1077ல் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். இதற்கான ஏற்பாடு மாவட்ட நிர்வாகத்தால் செய்யப்பட்டுள்ளது. பொது மக்கள் தொலைபேசியில் தொடர்பு கொண்டு 24 மணிநேரமும் தகவல் தெரிவிக்கலாம்.
மாவட்டத்தில் உள்ள புயல் பாதுகாப்பு மையங்களில் அடிப்படை வசதிகளை சரி செய்து தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். மாநகராட்சி பகுதியில் பாலங்கள் மற்றும் சாலைகள் பழுதடைந்திருந்தால் உடனடியாக சரி செய்ய வேண்டும். சுரங்க பாதைகளில் தண்ணீர் தேங்கி நிற்கும் போது அதனை வெளியேற்ற மோட்டார் பம்புகள், ஜெனரேட்டர்கள் ஆகியவை கையிருப்பில் வைத்திருக்க வேண்டும். பேரூராட்சி செயல் அலுவலர் மற்றும் ஊராட்சி ஒன்றிய ஆணையர்கள் தங்கள் பகுதிக்குட்பட்ட ஏரி, குளங்களில் தாழ்வான கரைகளை கண்டறிந்து உடைப்பு ஏற்படா வண்ணம் பலப்படுத்த வேண்டும்.
மேலும் ஏரி, குளங்களை தூர்வார வேண்டும். நீர்வரத்து வாய்க்காலை சரி செய்ய வேண்டும். மேல்நிலை நீர்தேக்க தொட்டிகளில் கொசு முட்டைகள் உற்பத்தியாகாத வண்ணம் உரிய காலக்கெடுவிற்குள் தூய்மை செய்தல் வேண்டும். நீரினால் பரவும் நோய்களை தடுக்க தேவையான அளவு குளோரின் கலந்த நீரினை மக்கள் பயன்பாட்டிற்கு விநியோகம் செய்தல் வேண்டும்.
தீயணைப்புத் துறையினர் வெள்ளக் காலங்களில் பாதிக்கப்பட்ட மக்களை மீட்பதற்கு தேவையான உபகரணங்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். வருவாய்த்துறையினர் வெள்ள காலங்களில் மனித உயிரிழப்பு மற்றும் கால்நடை உயிரிழப்புää குடிசை பாதிப்பு தொடர்பான தினசரி அறிக்கை அளிக்க வேண்டும். கிராமங்களில் பயிர் சேதம் தொடர்பாக கிராம நிர்வாக அலுவலர்கள் கிராமக் கணக்குகளில் பதிவு செய்ய வேண்டும். நிவாரண மையங்களான மாநகராட்சிää நகராட்சிää அரசு பள்ளிகள்ää சமுதாய கூடங்கள் ஆகியவற்றை தூய்மைப்படுத்தி தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.
பொது மக்களுக்கு உடனுக்குடன் மருத்துவ வசதி செய்வதற்கு சுகாதாரத்துறையினர் மருத்துவக்குழுக்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். ஆம்புலன்ஸ் கூடிய மருத்துவக்குழு தயார் நிலையில் இருக்க வேண்டும்.
நெடுஞ்சாலைத்துறையினர் சாலைகளில் விழும் மரங்களை அப்புறப்படுத்திட ஜேசிபி இயந்திரங்கள்ää மரம் அறுக்கும் இயந்திரங்கள் ஆகியவற்றை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.
பொதுப்பணித்துறையினர் ஏரிää குளம்ää வாய்க்கால் ஆகியவற்றில் ஆக்ரமிப்புகள் செய்யப்பட்டிருந்தால் உடனடியாக ஆக்ரமிப்புகளை அகற்ற வேண்டும். பொதுப் பணித்துறையினர் ஆற்று கரைகளை பலப்படுத்த வேண்டும். ஆறுகள் மற்றும் ஏரிகளில் புற்கள்ää காட்டாமணக்கு செடிகள் இருந்தால் அகற்றிட வேண்டும்.
உணவு பொருள் வழங்கல் துறை மழைக் காலங்களில் போதிய அத்தியாவசியப் பொருட்களான அரிசிää பருப்புää உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் இருப்பில் வைத்திருக்க வேண்டும்.
மீன்வளத்துறையினர் பேரிடர் காலங்களில் படகுகளின் உரிமையாளர்கள் மற்றும் கைபேசி எண் குறித்த விவரங்களை தயார் செய்து வைத்துக் கொள்ள வேண்டும். கால்நடை துறையினர் கால்நடைகளுக்கு தேவையான தீவனம் மற்றும் மருந்து மாத்திரைகள் இருப்பு வைத்துக் கொள்ள வேண்டும்.
பள்ளிக் கல்வி துறையினர் மழை காலங்களில் பொது மக்களை பள்ளிகளில் தங்க வைக்க அந்தந்த பள்ளி தலைமையாசிரியர்களுக்கு தக்க அறிவுரைகள் வழங்க வேண்டும்
தென்மேற்கு பருவ மழையின் போது அனைத்துத்துறை அலுவலர்களும் அந்தந்த துறைக்கு ஒதுக்கப்பட்டுள்ள பணிகளை முன்னெச்சரிக்கையாக செய்து முடித்து தென் மேற்கு பருவ மழை எதிர்கொள்வதற்கு தயார் நிலையில் இருக்க வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஆ.அண்ணாதுரை அறிவுறுத்தினார். இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ந.சக்திவேல் மற்றும் அனைத்துத் துறை முதன்மை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை தெரிவித்ததாவது;
தென்மேற்கு பருவ மழை தொடங்கவுள்ளதையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஒவ்வொரு துறைக்கும் ஒதுக்கப்பட்டுள்ள பணிகளை திறம்பட செய்து முடிக்க வேண்டும். தென்மேற்கு பருவ மழையின் போது, பொது மக்கள் வெள்ள சேதம் தொடர்பாக மாவட்ட நிர்வாகத்திற்கு கட்டணமில்லா தொலைபேசி எண் 1077ல் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். இதற்கான ஏற்பாடு மாவட்ட நிர்வாகத்தால் செய்யப்பட்டுள்ளது. பொது மக்கள் தொலைபேசியில் தொடர்பு கொண்டு 24 மணிநேரமும் தகவல் தெரிவிக்கலாம்.
மாவட்டத்தில் உள்ள புயல் பாதுகாப்பு மையங்களில் அடிப்படை வசதிகளை சரி செய்து தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். மாநகராட்சி பகுதியில் பாலங்கள் மற்றும் சாலைகள் பழுதடைந்திருந்தால் உடனடியாக சரி செய்ய வேண்டும். சுரங்க பாதைகளில் தண்ணீர் தேங்கி நிற்கும் போது அதனை வெளியேற்ற மோட்டார் பம்புகள், ஜெனரேட்டர்கள் ஆகியவை கையிருப்பில் வைத்திருக்க வேண்டும். பேரூராட்சி செயல் அலுவலர் மற்றும் ஊராட்சி ஒன்றிய ஆணையர்கள் தங்கள் பகுதிக்குட்பட்ட ஏரி, குளங்களில் தாழ்வான கரைகளை கண்டறிந்து உடைப்பு ஏற்படா வண்ணம் பலப்படுத்த வேண்டும்.
மேலும் ஏரி, குளங்களை தூர்வார வேண்டும். நீர்வரத்து வாய்க்காலை சரி செய்ய வேண்டும். மேல்நிலை நீர்தேக்க தொட்டிகளில் கொசு முட்டைகள் உற்பத்தியாகாத வண்ணம் உரிய காலக்கெடுவிற்குள் தூய்மை செய்தல் வேண்டும். நீரினால் பரவும் நோய்களை தடுக்க தேவையான அளவு குளோரின் கலந்த நீரினை மக்கள் பயன்பாட்டிற்கு விநியோகம் செய்தல் வேண்டும்.
தீயணைப்புத் துறையினர் வெள்ளக் காலங்களில் பாதிக்கப்பட்ட மக்களை மீட்பதற்கு தேவையான உபகரணங்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். வருவாய்த்துறையினர் வெள்ள காலங்களில் மனித உயிரிழப்பு மற்றும் கால்நடை உயிரிழப்புää குடிசை பாதிப்பு தொடர்பான தினசரி அறிக்கை அளிக்க வேண்டும். கிராமங்களில் பயிர் சேதம் தொடர்பாக கிராம நிர்வாக அலுவலர்கள் கிராமக் கணக்குகளில் பதிவு செய்ய வேண்டும். நிவாரண மையங்களான மாநகராட்சிää நகராட்சிää அரசு பள்ளிகள்ää சமுதாய கூடங்கள் ஆகியவற்றை தூய்மைப்படுத்தி தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.
பொது மக்களுக்கு உடனுக்குடன் மருத்துவ வசதி செய்வதற்கு சுகாதாரத்துறையினர் மருத்துவக்குழுக்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். ஆம்புலன்ஸ் கூடிய மருத்துவக்குழு தயார் நிலையில் இருக்க வேண்டும்.
நெடுஞ்சாலைத்துறையினர் சாலைகளில் விழும் மரங்களை அப்புறப்படுத்திட ஜேசிபி இயந்திரங்கள்ää மரம் அறுக்கும் இயந்திரங்கள் ஆகியவற்றை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.
பொதுப்பணித்துறையினர் ஏரிää குளம்ää வாய்க்கால் ஆகியவற்றில் ஆக்ரமிப்புகள் செய்யப்பட்டிருந்தால் உடனடியாக ஆக்ரமிப்புகளை அகற்ற வேண்டும். பொதுப் பணித்துறையினர் ஆற்று கரைகளை பலப்படுத்த வேண்டும். ஆறுகள் மற்றும் ஏரிகளில் புற்கள்ää காட்டாமணக்கு செடிகள் இருந்தால் அகற்றிட வேண்டும்.
உணவு பொருள் வழங்கல் துறை மழைக் காலங்களில் போதிய அத்தியாவசியப் பொருட்களான அரிசிää பருப்புää உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் இருப்பில் வைத்திருக்க வேண்டும்.
மீன்வளத்துறையினர் பேரிடர் காலங்களில் படகுகளின் உரிமையாளர்கள் மற்றும் கைபேசி எண் குறித்த விவரங்களை தயார் செய்து வைத்துக் கொள்ள வேண்டும். கால்நடை துறையினர் கால்நடைகளுக்கு தேவையான தீவனம் மற்றும் மருந்து மாத்திரைகள் இருப்பு வைத்துக் கொள்ள வேண்டும்.
பள்ளிக் கல்வி துறையினர் மழை காலங்களில் பொது மக்களை பள்ளிகளில் தங்க வைக்க அந்தந்த பள்ளி தலைமையாசிரியர்களுக்கு தக்க அறிவுரைகள் வழங்க வேண்டும்
தென்மேற்கு பருவ மழையின் போது அனைத்துத்துறை அலுவலர்களும் அந்தந்த துறைக்கு ஒதுக்கப்பட்டுள்ள பணிகளை முன்னெச்சரிக்கையாக செய்து முடித்து தென் மேற்கு பருவ மழை எதிர்கொள்வதற்கு தயார் நிலையில் இருக்க வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஆ.அண்ணாதுரை அறிவுறுத்தினார். இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ந.சக்திவேல் மற்றும் அனைத்துத் துறை முதன்மை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.