அதிராம்பட்டினம், ஜூன் 02
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் அனைத்து மஹல்லா நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் சம்சுல் இஸ்லாம் சங்கத்தில் சனிக்கிழமை மாலை நடைபெற்றது.
கூட்டத்திற்கு, மவ்லவி. ஏ.எஸ் அகமது இப்ராஹீம் தலைமை வகித்தார். மவ்லவி முகமது யூசுப், மவ்லவி அப்துல் ஹாதி முப்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில், அண்மை காலமாக அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் பண்டிகை காலங்கள் மற்றும் இன்ன பிற விசேஷ தினங்களின் போது, இருசக்கர வாகனங்களை அசுர வேகத்தில் ஓட்டிச்செல்லும் இளைஞர்களால் சமூகத்திற்கு ஏற்படும் அச்சுறுத்தல் குறித்து விவாதிக்கப்பட்டன.
மேலும், விபத்தில் ஏற்படும் உயிரிழப்பு, படுகாயங்கள், அதன் மூலம் குடும்பத்தாருக்கு ஏற்படும் பொருளாதார இழப்பீடு, மன உளைச்சல், போலீஸ் சட்ட நடவடிக்கை உள்ளிட்டவை குறித்து பேசப்பட்டன.
இதில், அதிரை அனைத்து மஹல்லா கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஹாஜி எம்.எஸ் ஷிஹாபுதீன், சம்சுல் இஸ்லாம் சங்கம் சார்பில் அதன் தலைவர் மு. முகமது அபூபக்கர், துணைத் தலைவர் அ. முகைதீன் மன்சூர், பொருளாளர் பேராசிரியர் ஜெ. செய்யது அகமது கபீர், தாஜுல் இஸ்லாம் சங்கம் சார்பில் அதன் தலைவர் எம்.எம்.எஸ் சேக் நசுருதீன், செயலாளர் ம.செ ஜபருல்லா, பொருளாளர் பகுருதீன், கடற்கரைத்தெரு ஜமாத் சார்பில், அதன் துணைத் தலைவர் அகமது ஹாஜா, தரகர் தெரு முகைதீன் ஜும்மா பள்ளி நிர்வாகக் கமிட்டித் தலைவர் ஆஃப்ரின் நெய்னா முகமது, கீழத்தெரு ஜமாத் சார்பில், அதன் தலைவர் தாஜுதீன், செயலாளர் சேக்தாவூது, பொருளாளர் என்.எம்.எஸ் மன்சூர், லயன் எம்.ஏ அப்துல் ஜலீல், புதுத்தெரு மிஷ்கின் சாஹிப் பள்ளி நிர்வாகக்கமிட்டி சார்பில் அகமது அனஸ், மர்ஜூக் நெசவுத்தெரு மாஆதினுல் ஹசனாத்தில் இஸ்லாமிய சங்கத் தலைவர் முகமது முகைதீன், துணைத் தலைவர் ஜபருல்லா, மஸ்ஜித் பிலால் நகர் பள்ளி முத்தவல்லி எஸ்.எம்.ஏ அகமது கபீர் மற்றும் சம்சுல் இஸ்லாம் சங்க முன்னாள் ~ இந்நாள் நிர்வாகிகள், இளைஞர்கள் சங்க நிர்வாகிகள், மஹல்லாவாசிகள் பலர் கலந்துகொண்டு கருத்துரை வழங்கினர்.
கூட்ட முடிவில், இருசக்கர வாகனங்களை அசுர வேகத்தில் ஓட்டிச்செல்வதால் இளைஞர்களுக்கு ஏற்படும் விபத்து குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும், பெற்றோர்கள் மூலம் அவர்களுக்கு எச்சரிக்கை விடுப்பது ~ அறிவுரை வழங்குவது எனவும், இவற்றை மீறும் இளைஞர்கள் மீது காவல்துறையினர் சட்ட நடவடிக்கை மேற்கொள்வார்கள் என்கிற எச்சரிக்கையை துண்டு பிரசுர அறிவிப்பாக வெளியீடுவதென முடிவு செய்யப்பட்டது.
மேலும், அதிராம்பட்டினம் அனைத்து மஹல்லா நிர்வாகிகளின் அடுத்தக்கூட்டத்தை பெருநாள் சந்திப்பாக நடத்துவதற்கு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டன.
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் அனைத்து மஹல்லா நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் சம்சுல் இஸ்லாம் சங்கத்தில் சனிக்கிழமை மாலை நடைபெற்றது.
கூட்டத்திற்கு, மவ்லவி. ஏ.எஸ் அகமது இப்ராஹீம் தலைமை வகித்தார். மவ்லவி முகமது யூசுப், மவ்லவி அப்துல் ஹாதி முப்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில், அண்மை காலமாக அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் பண்டிகை காலங்கள் மற்றும் இன்ன பிற விசேஷ தினங்களின் போது, இருசக்கர வாகனங்களை அசுர வேகத்தில் ஓட்டிச்செல்லும் இளைஞர்களால் சமூகத்திற்கு ஏற்படும் அச்சுறுத்தல் குறித்து விவாதிக்கப்பட்டன.
மேலும், விபத்தில் ஏற்படும் உயிரிழப்பு, படுகாயங்கள், அதன் மூலம் குடும்பத்தாருக்கு ஏற்படும் பொருளாதார இழப்பீடு, மன உளைச்சல், போலீஸ் சட்ட நடவடிக்கை உள்ளிட்டவை குறித்து பேசப்பட்டன.
இதில், அதிரை அனைத்து மஹல்லா கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஹாஜி எம்.எஸ் ஷிஹாபுதீன், சம்சுல் இஸ்லாம் சங்கம் சார்பில் அதன் தலைவர் மு. முகமது அபூபக்கர், துணைத் தலைவர் அ. முகைதீன் மன்சூர், பொருளாளர் பேராசிரியர் ஜெ. செய்யது அகமது கபீர், தாஜுல் இஸ்லாம் சங்கம் சார்பில் அதன் தலைவர் எம்.எம்.எஸ் சேக் நசுருதீன், செயலாளர் ம.செ ஜபருல்லா, பொருளாளர் பகுருதீன், கடற்கரைத்தெரு ஜமாத் சார்பில், அதன் துணைத் தலைவர் அகமது ஹாஜா, தரகர் தெரு முகைதீன் ஜும்மா பள்ளி நிர்வாகக் கமிட்டித் தலைவர் ஆஃப்ரின் நெய்னா முகமது, கீழத்தெரு ஜமாத் சார்பில், அதன் தலைவர் தாஜுதீன், செயலாளர் சேக்தாவூது, பொருளாளர் என்.எம்.எஸ் மன்சூர், லயன் எம்.ஏ அப்துல் ஜலீல், புதுத்தெரு மிஷ்கின் சாஹிப் பள்ளி நிர்வாகக்கமிட்டி சார்பில் அகமது அனஸ், மர்ஜூக் நெசவுத்தெரு மாஆதினுல் ஹசனாத்தில் இஸ்லாமிய சங்கத் தலைவர் முகமது முகைதீன், துணைத் தலைவர் ஜபருல்லா, மஸ்ஜித் பிலால் நகர் பள்ளி முத்தவல்லி எஸ்.எம்.ஏ அகமது கபீர் மற்றும் சம்சுல் இஸ்லாம் சங்க முன்னாள் ~ இந்நாள் நிர்வாகிகள், இளைஞர்கள் சங்க நிர்வாகிகள், மஹல்லாவாசிகள் பலர் கலந்துகொண்டு கருத்துரை வழங்கினர்.
கூட்ட முடிவில், இருசக்கர வாகனங்களை அசுர வேகத்தில் ஓட்டிச்செல்வதால் இளைஞர்களுக்கு ஏற்படும் விபத்து குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும், பெற்றோர்கள் மூலம் அவர்களுக்கு எச்சரிக்கை விடுப்பது ~ அறிவுரை வழங்குவது எனவும், இவற்றை மீறும் இளைஞர்கள் மீது காவல்துறையினர் சட்ட நடவடிக்கை மேற்கொள்வார்கள் என்கிற எச்சரிக்கையை துண்டு பிரசுர அறிவிப்பாக வெளியீடுவதென முடிவு செய்யப்பட்டது.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.