அதிராம்பட்டினத்தின் பிரசித்தம் பெற்ற பலகாரங்களில் ஒன்று 'வாடா'. தினமும் இவற்றை தயாரித்து விற்பனை செய்து வந்தவர் கதிஜா அம்மாள் (வயது 55). இவர், அதிரையின் பிரபல மேஸ்திரி பாருக் சகோதரி ஆவார். கிழக்கு கடற்கரைச் சாலை கல்லூரி முக்கம் அருகே வாடா கடை அமைத்து வியாபாரம் செய்து வந்தார். இவர் தயாரிக்கும் வாடா பலகாரம் மிகவும் ருசியாக இருக்கும் என்பதால், இவருக்கு ஏராளமான வாடிக்கையாளர்கள் இருந்து வந்தனர்.
இந்நிலையில், இன்று (பிப்.07) வெள்ளிக்கிழமை காலை அதிராம்பட்டினம் ஆதம் நகர் (தவ்ஹீத் பள்ளிவாசல் அருகில்) இல்லத்தில் காலமானார்.
இவர் சேதுரோடு சேக்தாவூது என்பவரின் மனைவி ஆவார். இவருக்கு, முகமது ஆரிப், அபுல் ஹசன், ரியாஸ் அகமது, ஃபாய்ஸ் என்ற மகன்கள் உள்ளனர்.
அன்னாரின் உடல் நல்லடக்கம் குறித்து தகவல் பின்னர் அறிவிக்கப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க பிராத்தனை செய்வோம்.
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
ReplyDeleteஇன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜீவூன்
ReplyDeleteஇன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
ReplyDeleteInna lillahi va inna lillahi rajivoon
ReplyDelete