தஞ்சாவூர் மாவட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் கொரோனா நோய் முன்னெச்சரிக்கை தொடர்பான மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் ம.கோவிந்த ராவ் தலைமையில் இன்று (06.03.2020) நடைபெற்றது.
பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை சார்பில் நடைபெற்ற இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் பேசியதாவது :-
கொரோனா நோய் ஏற்படாமல் தடுப்பதற்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை சுகாதாரத்துறையினருடன் இணைந்து தொடர்புடைய அனைத்துத்துறை அலுவலர்களும் மேற்கொள்ள வேண்டும். தஞ்சாவூர் மாவட்டம் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் அதிகமாக வரும் இடம் என்பதால், தீவிர சுகாதார கண்காணிப்பு பணியை மேற்கொள்ள வேண்டும். வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகை தரும் இடங்கள் மற்றும் தங்கும் விடுதிகளில் சுகாதாரத்துறையினர் கண்காணிப்பு செய்ய வேண்டும்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் இதுவரை கொரோனா நோயால் யாரும் பாதிக்கப்படவில்லை. மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊரகப் பகுதிகளில் உள்ளாட்சி அமைப்பு மூலமாக சுகாதார பணிகளை தீவிரமாக மேற்கொள்ள வேண்டும். தொற்று பாதிப்பு ஏற்படக்கூடிய பகுதிகளை கண்டறிந்து முன்னுரிமை அளிக்க வேண்டும். வரும்முன் காக்கும் வகையில் அனைத்து நடவடிக்கைகளையும் ஒருங்கிணைந்து மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு மாவட்ட ஆட்சித் தலைவர் பேசினார்.
இக்கூட்டத்தில் பட்டுக்கோட்டை சார் ஆட்சியர் கிளாஸ்டன் புஷ்பராஜ், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பழனி, மருத்துவத்துறை இணை இயக்குனர்(பொ) ராணி, சுகாதாரத்துறை துணை இயக்குனர் ரவீந்திரன், கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குனர் தமிழ்ச்செல்வம், தஞ்சாவூர் வருவாய் கோட்ட அலுவலர் வேலுமணி, உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) முருகேசன், வட்டார மருத்துவ அலுவலர்கள், அரசு மருத்துவர்கள் மற்றும் சுகாதாரத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை சார்பில் நடைபெற்ற இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் பேசியதாவது :-
கொரோனா நோய் ஏற்படாமல் தடுப்பதற்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை சுகாதாரத்துறையினருடன் இணைந்து தொடர்புடைய அனைத்துத்துறை அலுவலர்களும் மேற்கொள்ள வேண்டும். தஞ்சாவூர் மாவட்டம் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் அதிகமாக வரும் இடம் என்பதால், தீவிர சுகாதார கண்காணிப்பு பணியை மேற்கொள்ள வேண்டும். வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகை தரும் இடங்கள் மற்றும் தங்கும் விடுதிகளில் சுகாதாரத்துறையினர் கண்காணிப்பு செய்ய வேண்டும்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் இதுவரை கொரோனா நோயால் யாரும் பாதிக்கப்படவில்லை. மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊரகப் பகுதிகளில் உள்ளாட்சி அமைப்பு மூலமாக சுகாதார பணிகளை தீவிரமாக மேற்கொள்ள வேண்டும். தொற்று பாதிப்பு ஏற்படக்கூடிய பகுதிகளை கண்டறிந்து முன்னுரிமை அளிக்க வேண்டும். வரும்முன் காக்கும் வகையில் அனைத்து நடவடிக்கைகளையும் ஒருங்கிணைந்து மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு மாவட்ட ஆட்சித் தலைவர் பேசினார்.
இக்கூட்டத்தில் பட்டுக்கோட்டை சார் ஆட்சியர் கிளாஸ்டன் புஷ்பராஜ், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பழனி, மருத்துவத்துறை இணை இயக்குனர்(பொ) ராணி, சுகாதாரத்துறை துணை இயக்குனர் ரவீந்திரன், கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குனர் தமிழ்ச்செல்வம், தஞ்சாவூர் வருவாய் கோட்ட அலுவலர் வேலுமணி, உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) முருகேசன், வட்டார மருத்துவ அலுவலர்கள், அரசு மருத்துவர்கள் மற்றும் சுகாதாரத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.