சம்பவத்தன்று இரவு 12.30 மணியளவில் இவர் வீட்டின் மீது மர்மமான முறையில் தீ பரவியது. இதனால் வீட்டில் இருந்த பிரீஜர், லேப்டாப், பீரோல், கட்டில், கிரைண்டர், காஸ் ஸ்டவ், துணிமணிகள் உள்ளிட்ட வீட்டு உபயோகப் பொருட்கள் அனைத்தும் தீயில் கருகின. மேலும் பள்ளி மாற்றுச்சான்றிதழ்கள், மார்க் சீட்கள், ரேசன் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை , வங்கி கணக்கு அட்டை உள்ளிட்ட ஆவணங்கள் முற்றிலும் எரிந்து சாம்பாலாகின. தனது மகளின் திருமணத்திற்காக வைத்திருந்த ரூபாய் 3 லட்சம் ரொக்கம், புடவைகள் மற்றும் நகைகள் தீயில் கருகியுள்ளது. இதன் மதிப்பு 10 இலட்சத்திற்கும் மேல் இருக்கும் என கணக்கிடப்படுகிறது.
நடு இரவில் ஏற்பட்ட தீயினால் செய்வதறியாது தவித்த அக்குடும்பத்தினர்க்கு அக்கம் பக்கத்தினர் தீயை அணைக்க உதவியுள்ளனர். தகவலறிந்த அதிரை காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வழக்கு பதிவு செய்து தீ விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் தகவலறிந்த அதிரை பேரூராட்சித் தலைவர் S.H. அஸ்லம் அவர்கள் சம்பவ இடத்தை பார்வையிட்டு பாதிக்கப்பட்ட குடும்பத்தினர்க்கு ஆறுதல் கூறினார்.
வீட்டில் உள்ள அனைத்து பொருட்களும் முழுமையாக எரிந்திருந்த நிலையில் இறை வேதமாகிய திருக்குர்ஆன் மட்டும் இறைவன் அருளால் பாதுகாப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது.
பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆழ்ந்த அனுதாபம். தீ வைத்த விசமிகளை கண்டறிந்து சட்டத்தின் முன் தண்டிக்க வேண்டும்.திருகுர்ஆனை பாதுகாத்த வல்ல ரஹ்மானிடம் பிராத்திப்போம்.பாதிப்புக்குள்ளான குடுப்பத்தினருக்கு நஷ்டயீடு அரசு சார்பில் வழங்க சேர்மன் நடவடிக்கை எடுக்க வேண்டும்.அனைத்து முஹல்லா சார்பிலும் உதவிகரம் கொடுக்க வேண்டும்.
ReplyDeleteஇம்ரான்.M.யூஸுப்
பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆழ்ந்த அனுதாபம். தீ வைத்த விசமிகளை கண்டறிந்து சட்டத்தின் முன் தண்டிக்க வேண்டும்.திருகுர்ஆனை பாதுகாத்த வல்ல ரஹ்மானிடம் பிராத்திப்போம்.பாதிப்புக்குள்ளான குடுப்பத்தினருக்கு நஷ்டயீடு அரசு சார்பில் வழங்க சேர்மன் நடவடிக்கை எடுக்க வேண்டும்.அனைத்து முஹல்லா சார்பிலும் உதவிகரம் கொடுக்க வேண்டும்.
ReplyDelete