.

Pages

Monday, July 8, 2013

அதிரைப் பேரூராட்சியின் 12 வது வார்டு பகுதியில் குப்பைகளை அப்புறப்படுத்தாதால் கழிவு நீர் தேக்கம் !

அதிரைப் பேரூராட்சியின் 12 வது வார்டு பகுதியில் குறிப்பாக மீரா மெடிக்கலை ஒட்டிய சாலையோரத்தில் தேங்கிக் கிடக்கும் குப்பைகளை அப்புறப்படுத்தாததால் துர்நாற்றமும், குப்பைகளால் வாய்கால் கழிவு நீர் வெளியேறாமல் தேங்கி இருப்பதாகவும் அப்பகுதியைச் சார்ந்த சமூக ஆர்வலர் ஒருவர் புகைப்பட ஆதாரத்துடன் நம்மை அணுகினார்.


உடனே சம்பந்தப்பட்ட பகுதிக்கு விரைந்து சென்று பார்வையிட்ட அதிரை நியூஸ் குழுவினர் புகாரை உறுதிபடுத்திக்கொண்டு இந்தப்பகுதியின் வார்டு உறுப்பினர் நூர் லாட்ஜ் செய்யது அவர்களை நேரில் சந்தித்து குப்பை மற்றும் தேங்கிய கழிவு நீரை அப்புறப்படுத்தக் கேட்டுக்கொண்டனர்.

இதைத் தொடர்ந்து துரித நடவடிக்கையில் இறங்கிய நூர் லாட்ஜ் செய்யது அவர்கள், பேரூராட்சி ஊழியர்களின் உதவியுடன் அப்பகுதியில் தேங்கிய குப்பைகளை அப்புறப்படுத்த உடனிருந்து உதவினார். மேலும் பொதுமக்கள் சாலையோரமும், வாய்க்காலிலும் குப்பைகளை கொட்டுவதை தவிர்க்க வேண்டும் என்று வேண்டுகோளையும் வைத்தார்.

அதிரை நியூஸ் குழுவினர்

3 comments:

  1. பதிவுக்கு நன்றி.

    தகவலுக்கும் நன்றி.
    சந்தோஷமான செய்தி.

    இப்படிக்கு.

    K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
    த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
    உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை

    ReplyDelete
  2. தகவலை சேகரித்து உடனே வார்டு உறுப்பினருக்கு அறியச்செய்த அதிரை நியூஸ்சிற்கு முதலில் நன்றி.

    தகவல் கிடைத்ததும் துரிதமாக நடவடிக்கை எடுத்து குப்பை கூளங்களை அள்ளச்செய்து சுத்தம் செய்த வார்டு உறுப்பினர் நூர் லாட்ஜ் செய்யது அவர்களுக்கு நன்றியுடன் வாழ்த்துக்கள்.

    சுற்றுச்சூழல் மாசுபடாமல் இருக்க ஊரைச்சுத்தமாக வைத்துக்கொள்ள ஆங்காங்கே விழிப்புணர்வு வாசகம் அடங்கிய அறிவிப்புப்பலகை வைக்க வேண்டும் என்பது எனது வேண்டுகோள்.

    ReplyDelete
  3. பிரச்சனையை அதிரை நியூஸ் பார்வைக்கு துணிச்சலாக கொண்டுச் சென்ற சகோதரருக்கும், பிரச்சனை தீர உடன் நடவடிக்கையில் இறங்கிய 12 வது வார்டு உறுப்பினர் நூர் லாட்ஜ் செய்யது காக்கா அவர்களுக்கும் நன்றி !

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.