.

Pages

Monday, July 1, 2013

அதிரை இளைஞர் கால்பந்துக் கழகம் நடத்திய கால்பந்தாட்ட போட்டியில் வெற்றி பெற்றோருக்கான பரிசளிப்பு நிகழ்ச்சி !

அதிரை இளைஞர் கால்பந்துக் கழகம், மர்ஹூம் S.S.M. குல் முஹம்மத் அவர்களின் நினைவாக நடத்தும் 19 ஆம் ஆண்டு மாபெரும் கால்பந்து தொடர் போட்டி நமதூர் கடற்கரைத்தெரு விளையாட்டு மைதானத்தில் கடந்த சில நாட்களாக சிறப்பாக நடைபெற்று வந்தன. இதில் பல்வேறு ஊர்களிலிருந்து வருகை தந்த கால்பந்தாட்ட வீரர்கள் பலர் போட்டிகளில் பங்கு பெற்று விளையாடி வந்தனர்.

நேற்று [ 30-06-2013 ] மாலை 5.30 மணியளவில் நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் அதிரை அணியினரோடு கண்டனூர் 7 கண்டனூர் அணியினர் மோதினர். விறு விருப்புடன் நடந்துவந்த ஆட்டத்தின் இறுதியில் கண்டனூர் அணியினர் மூன்று கோல் போட்டு 3-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றனர்.

இதைத்தொடர்ந்து வெற்றி பெற்றோருக்கான பரிசளிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்ட  N.M.S. ஜெஹபர் அலி , ஜலீலா ஜுவல்லரி முஹம்மது மொய்தீன் , அக்பர் ஹாஜியார், பேராசிரியர் செய்யது அஹமது கபீர், கால்பந்தாட்ட பயிற்சியாளர் அன்வர் ஆகியோர் விளையாட்டு வீரர்களுக்கு பரிசுகளை வழங்கி கெளரவித்தனர்.  பரிசளிப்பு நிகழ்ச்சியைக் காண ஏராளமான விளையாட்டுப் பிரியர்கள் மற்றும் பொதுமக்கள் வந்திருந்தனர்.










நன்றி : அதிரை மைதீன் மற்றும் இஸ்மாயில்

2 comments:

  1. பதிவுக்கு நன்றி.

    தகவலுக்கும் நன்றி.
    சந்தோஷமான செய்தி.

    இப்படிக்கு.

    K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
    த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
    உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை

    ReplyDelete
  2. பதிவுக்கு நன்றி.
    சந்தோஷமான செய்தி.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.