.

Pages

Friday, February 28, 2014

தக்வா பள்ளிக்கு ஜனாஸா குளிப்பாட்ட பயன்படுத்தப்படும் சாதனத்தை வழங்கியது அதிரை பைத்துல்மால் !

அதிரை பைத்துல்மாலில் இன்று மாலை நடைபெற்ற மாதாந்திரக் கூட்டத்தின்போது ஜனாஸா குளிப்பாட்ட பயன்படுத்தும் சாதனத்தை தக்வா பள்ளியின் நிர்வாகிகளிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த சாதனத்தை அதிரை பைத்துல்மால் நிர்வாகிகளிடமிருந்து தக்வா பள்ளியின் டிரஸ்ட் தலைவர் அப்துல் சுக்கூர், நிர்வாக உறுப்பினர் மஜீத் ஆகியோர் பெற்றுச்சென்றனர்.

இது குறித்து அதிரை பைத்துல்மாலின் செயலாளர் அப்துல் ஹமீது அவர்கள் நம்மிடம் கூறியதாவது...
'அதிரை பைத்துல்மால் சார்பாக ஜனாஸா குளிப்பாட்ட பயன்படுத்தும் சாதனத்தை இன்று மாலை தக்வாபள்ளியின் நிர்வாகிகளிடம் வழங்கினோம். இதைதொடர்ந்து அதிரையில் கஃப்ர்ஸ்தான் அமைந்துள்ள பிற பள்ளிகளுக்கும் வழங்க திட்டமிட்டுள்ளோம்.

இவற்றை எளிதாக பயன்படுத்தும் நோக்கில் 17 ஆயிரம் ரூபாய் செலவில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த முயற்சிக்காக அதிரை பைத்துல்மால் சார்பாக அந்தந்த நாடுகளில் உள்ள கிளை நிர்வாகிகள் நிதிதிரட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இவற்றிற்கு தாராளமாக உதவுவதன் மூலம் இவற்றின் பங்கை மேலும் விரிவுபடுத்த இயலும்' என்றார்.

3 comments:

  1. Adirai paiththulmal paneserakka ullam kulera vaththukenrean. Nervakekal anaivarukkum nanre..nanre

    ReplyDelete
  2. இது மிக மிக தாமதமாக கொடுக்கப்பட்டுள்ளது, முன்னறே ரஹ்மானியா பள்ளி, கடற்கரை பள்ளி, மற்றும் ஹனீப் பள்ளி ஆகிய பள்ளிகளில் வந்தாயிற்று நல்லுள்ளம் படைத்தவர்கள் மறைமுகமாக கொடுத்துள்ளனர என்பது குறிப்பிடதக்கது

    ReplyDelete
  3. பதிவுக்கு நன்றி.
    தகவலுக்கும் நன்றி.

    பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்.

    இப்படிக்கு.
    K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
    த.பெ. மர்ஹும் கோ.மு.முஹம்மது அலியார்.
    உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.