.

Pages

Thursday, January 19, 2017

துபாயில் 4 மாதங்களாக காருக்குள் 'வாழும்' பிரிட்டீஷ் பெண் !

அதிரை நியூஸ்: ஜன-19
இந்திய வம்சாவளியை சேர்ந்த 42 வயது பிரிட்டீஷ் பெண் ஒருவர் கடன் சுமையால் காருக்குள்ளே உறங்கி எழும் அவலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ஒரு நேரத்தில் இவர் சுயமாக வேலைவாய்ப்பு நிறுவனம் ஒன்றை நடத்தி பலருக்கும் வேலைவாய்ப்புக்களை ஏற்படுத்தி தந்தவர் இன்று அவருக்கே வேலையின்றி தவிக்கின்றார்.

கடந்த செப்டம்பர் மாதம் துபையில் தான் நடத்தி வந்த வேலைவாய்ப்பு ஆலோசணை நிறுவனத்தை தொடர்ந்து நடத்த இயலாததால் மூடிவிட்டு மீண்டும் பிரிட்டன் திரும்புவதற்காக வந்தவரால் மீண்டும் திரும்ப இயலாத அளவிற்கு எதிர்பாராமல் ஏற்பட்ட கடன் சுமை.

கேன்சர் நோயாளி ஒருவரின் சிகிச்சைக்காக கொடுத்த கடன் 40,000 திரும்ப கிடைக்காத நிலையிலும், கார் வாடகை நிறுவனத்திற்கு செலுத்த வேண்டிய தொகை 10,000 திர்ஹத்திற்கு மேல் சென்று விட்டதாலும், வேலையோ வருமானமோ இல்லாததால் வீடு வாடகைக்கு எடுக்க இயலாததாலும், முறையான விசா இன்றி சட்ட விரோதமாக தங்கியுள்ளதால் செலுத்த வேண்டிய அபராதங்கள் ஒருபுறம் வளர்ந்து கொண்டுள்ள நிலையிலும், பலமுறை உதவிய நண்பர்களும் ஒரு கட்டத்திற்கு மேல் அவரது போனையே எடுக்காமல் தவிர்க்கும் நிலை உருவானதாலும் காரே கதியென ஆகிப்போனது அவரது வாழ்க்கை.

கச்சா பார்க்கிங்குகளில் காரை நிறுத்திவிட்டு காருக்குள்ளேயே உறங்கும் இந்தப்பெண் உடை மாற்றவும் சுகாதாரத்திற்கும் ஹோட்டல் பாத்ரூம்களையே பயன்படுத்தி வந்துள்ளார்.

இந்த கடினமான நிலையில் அவர் வேண்டுவதெல்லாம் மனித வளத்துறையில் அல்லது விற்பனையாளராக அல்லது பயிற்சியாளராக வேலை ஒன்றே, வேலை கிடைத்தால் என்னுடைய கஷ்டநிலையிலிருந்து மீண்டு விடுவேன் என தன்னம்பிக்கையுடன் பேசுகிறார்.

ஆண்களே தடுமாறும் இத்தகைய சோதனை நிலையை ஒரு பெண் அனுபவித்துக் கொண்டுள்ளது மிக மிகத் துயரமானதே.

Source; News Xpress (Gulf News)
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.