.

Pages

Wednesday, January 18, 2017

ஆஹா! அருமை.. அருமை.. பிளாஸ்டிக் பாட்டில்களில் பெட்ஷீட் !

அதிரை நியூஸ்: ஜன-18
சுற்றுச்சூழலுக்கு பெரிதும் கேடு விளைவிக்கும் பிளாஸ்டிக் பாட்டில் போன்ற பொருட்களை நாம் என்ன செய்வோம்? வீதியில் தூக்கி எரிந்துவிட்டு ஹாயாக நடந்து சென்றுவிடுவோம் ஆனால்.... துபையின் எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் நிறுவனம் செய்தது என்ன தெரியுமா!

துபையின் எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் விமானத்தில் நீண்டதூர எகனாமி வகுப்பு பயணிகளுக்கு வழங்கப்படும் மென்மையான போர்வைகள் (soft yarn blankets) 100 சதவிகிதம் பிளாஸ்டிக் பாட்டில்களை மறுசுழற்சி செய்து உருவாக்கப்பட்ட இழைகளால் தயாரிக்கப்பட்டவை. இத்தகைய மென்மையான போர்வைகளை buzz. என்ற மறுசுழற்சி பொருட்களை தயாரிக்கும் நிறுவனத்துடன் கைகோர்த்து தயாரித்து வழங்குகிறது.

28 பிளாஸ்டிக் பாட்டில்களை ecoTHREAD எனும் காப்புரிமை (patent) செய்யப்பட்ட நவீன தொழிற்நுட்பத்தை பயன்படுத்தி மறுசுழற்சி செய்தால் சுற்றுச்சூழலுக்கு உகந்த ஒரு மென்மையான போர்வை தயார்.

2019 ஆம் ஆண்டு இறுதிக்குள் தூக்கி எறியப்பட்ட சுமார் 88 மில்லியன் பிளாஸ்டிக் பாட்டில்களை கொண்டு மறுசுழற்சி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன் மொத்த எடை 44 A 380 வகை விமானங்களின் எடைக்கு நிகரானதாகும்.

மேலும், எமிரேட்ஸ் நிறுவனத்தின் பசுமை திட்டத்தின் கீழ் buzz. நிறுவனத்துடன் இணைந்து எமிரேட்ஸ் விமானத்தில் பயன்படுத்தப்படும் அலுமினியம், கிளாஸ் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தி மாற்றுப் பொருட்களை தயாரித்து வழங்கிட ஒப்பந்தம் செய்துள்ளது.

ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட தினசரி பேப்பர்கள், இதழ்கள், கார்டு போர்டு அட்டை பெட்டிகள் போன்றவற்றை மறுசுழற்சி செய்து சுத்தம் செய்ய பயன்படும் டிஷ்யூ பேப்பர் போன்றவற்றை தயாரித்து வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

Sources: Khaleej Times / buzz.
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.