.

Pages

Sunday, January 29, 2017

துபாயில் புதிய டிரைவர்களால் மட்டும் 49 பேர் மரணம் !

அதிரை நியூஸ்: ஜன-29
துபையில் கடந்த 2016 ஆம் ஆண்டு மட்டும் 198 பேர் டிரைவர்களால் நிகழ்ந்த சாலை விபத்துக்களில் மரணமடைந்துள்ளனர். அவர்களில் 49 பேரின் மரணம் ஒரு வருடத்திற்கும் குறைவான அனுபவமுள்ள டிரைவர்களால் நிகழ்ந்தவை என்பதுடன் இவர்களில் பெரும்பாலோர் ஆசிய நாடுகளைச் சேர்ந்த டிரைவர்கள். மேலும், 2015 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது 32 பேர் மட்டுமே புதிய டிரைவர்களால் உயிரிழந்துள்ளனர்.

சுமார் 20 வயது முதல் 40 வயதுடைய புதிய டிரைவர்களால் இந்த விபத்துக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இந்திய மற்றும் பாகிஸ்தானிய புதிய டிரைவர்களால் தலா 12 பேர் கொல்லப்பட்டுள்ளனர், இமராத்தி டிரைவர்களால் 3 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

இத்தகைய விபத்துக்களை எற்படுத்தும் டிரைவர்களில் பெரும்பாலோர் அதிகநேரம் பணியிலிருக்கும் டிரக் மற்றும் டெலிவரி வாகன டிரைவர்களால் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அதேவேளை 16 வருடம் அனுபவமுள்ள டிரைவர்கள் கூட 24 உயிரிழப்புக்களை ஏற்படுத்தியுள்ளனர் என்றாலும் இதுவே 2015 ஆம் ஆண்டு 18 என்ற எண்ணிக்கைக்குள் இருந்தது. விபத்துக்களால் ஏற்படும் உயிரிழப்புக்களை கட்டுப்படுத்துவதற்காக பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான் 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.