.

Pages

Tuesday, January 24, 2017

உலகின் அதிக பயணிகள் வந்துசெல்லும் விமான நிலையமாக துபாய் தேர்வு !

அதிரை நியூஸ்: ஜன-24
உலகில் அதிக பயணிகள் வந்து செல்லும் மிகவும் பரபரப்பான விமான நிலையமாக (Busiest Airport in the World) துபை சர்வதேச விமான நிலையம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. 2014 ஆம் ஆண்டு லண்டன் ஹீத்ரு விமான நிலையத்தை பின்னுக்குத் தள்ளியது முதல் இன்று வரை இச்சிறப்பை தக்க வைத்துக் கொண்டுள்ளது.

2016 வருடம் சுமார் 85 மில்லியன் பயணிகள் வந்து செல்வார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சுமார் 83.6 மில்லியன் பயணிகளே பயன்படுத்தியுள்ளனர். 2017 ஆம் ஆண்டிற்கான இலக்காக சுமார் 89 மில்லியன் பயணிகள் வருகை தருவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், ஒட்டுமொத்த விமான போக்குவரத்தில் (Overall Air Traffic) அமெரிக்காவின் அட்லண்டா விமான நிலையம் முதலிடத்திலும், சீனாவின் பெய்ஜிங் விமான நிலையம் 2வது இடத்திலும், துபை சர்வதேச விமானநிலையம் 3வது இடத்திலும் உள்ளன.

Source: Emirates 247
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.