அதிரை நியூஸ்: ஜன-24
துபையில் வசிக்கும் ஒவ்வொருவரும் சாராசரியாக ஆண்டொன்றுக்கு 17.2 கிலோ மின்னனு கழிவுகளை வீசி எறிகின்றனர். இத்தகைய மின்னனு கழிவுகளை (e-waste) சேகரிப்பதற்காக மட்டும் ஸ்மார்ட் குப்பை தொட்டிகளை (smartest e-bin) அறிமுகப்படுத்தவுள்ளது துபை அரசு.
குப்பை தொட்டியின் மேல் பொருத்தப்பட்டுள்ள சோலார் மின் சக்தி மூலம் இயங்கும் இந்த குப்பை தொட்டிகள் நிரம்பியவுடன் சம்பந்தப்பட்ட கழிவு மேலாண்மை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கும். மேலும் மின்னனு குப்பை தொட்டியின் கொள்ளளவு நிரம்பியிருந்தால் அதுகுறித்த தகவலை பயனாளர்களுக்கு தெரிவிப்பதுடன் காலியாக பக்கத்தில் இருக்கும் அடுத்த மின்னனு குப்பை தொட்டிகள் குறித்த விபரங்களை எல்ஈடி காட்சித்தகடுகள் (LED Display) வழியாக தகவல் தரும். மேலும், நாம் போடு குப்பை அந்தத் தொட்டியில் போட உகந்ததா? இல்லையா? எனவும் அறிவுறுத்துவதுடன் முன்பதிவு (Administrator Registration) மூலம் லாக்ஆன் (Log On) செய்தால் மட்டுமே பயன்படுத்த முடியும்.
உயர்தர கார்பன் இழைகளை (High Quality Carbon Fiber) கொண்டு உருவாக்கப்படவுள்ள இந்த மின்னனு குப்பைத் தொட்டிகள் 2020 ஆண்டு நடைபெறவுள்ள துபை எக்ஸ்போ (Dubai Expo 2020) எனும் சர்வதேச கண்காட்சியை தொடர்ந்து துபை முழுவதும் பயன்பாட்டுக்கு வரவுள்ளன. இந்த குப்பைத் தொட்டியில் சேகரிக்கப்படும் மின்னனு கழிவுகள் அனைத்தும் மறுசுழற்சி (Re-cycle) மூலம் மறுபயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்.
Source: Emirates 247
தமிழில்: நம்ம ஊரான்
துபையில் வசிக்கும் ஒவ்வொருவரும் சாராசரியாக ஆண்டொன்றுக்கு 17.2 கிலோ மின்னனு கழிவுகளை வீசி எறிகின்றனர். இத்தகைய மின்னனு கழிவுகளை (e-waste) சேகரிப்பதற்காக மட்டும் ஸ்மார்ட் குப்பை தொட்டிகளை (smartest e-bin) அறிமுகப்படுத்தவுள்ளது துபை அரசு.
குப்பை தொட்டியின் மேல் பொருத்தப்பட்டுள்ள சோலார் மின் சக்தி மூலம் இயங்கும் இந்த குப்பை தொட்டிகள் நிரம்பியவுடன் சம்பந்தப்பட்ட கழிவு மேலாண்மை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கும். மேலும் மின்னனு குப்பை தொட்டியின் கொள்ளளவு நிரம்பியிருந்தால் அதுகுறித்த தகவலை பயனாளர்களுக்கு தெரிவிப்பதுடன் காலியாக பக்கத்தில் இருக்கும் அடுத்த மின்னனு குப்பை தொட்டிகள் குறித்த விபரங்களை எல்ஈடி காட்சித்தகடுகள் (LED Display) வழியாக தகவல் தரும். மேலும், நாம் போடு குப்பை அந்தத் தொட்டியில் போட உகந்ததா? இல்லையா? எனவும் அறிவுறுத்துவதுடன் முன்பதிவு (Administrator Registration) மூலம் லாக்ஆன் (Log On) செய்தால் மட்டுமே பயன்படுத்த முடியும்.
உயர்தர கார்பன் இழைகளை (High Quality Carbon Fiber) கொண்டு உருவாக்கப்படவுள்ள இந்த மின்னனு குப்பைத் தொட்டிகள் 2020 ஆண்டு நடைபெறவுள்ள துபை எக்ஸ்போ (Dubai Expo 2020) எனும் சர்வதேச கண்காட்சியை தொடர்ந்து துபை முழுவதும் பயன்பாட்டுக்கு வரவுள்ளன. இந்த குப்பைத் தொட்டியில் சேகரிக்கப்படும் மின்னனு கழிவுகள் அனைத்தும் மறுசுழற்சி (Re-cycle) மூலம் மறுபயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்.
Source: Emirates 247
தமிழில்: நம்ம ஊரான்
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.