தஞ்சாவூர் மாவட்டம், பூதலூர் வட்டம் கோயில்பத்து, தஞ்சாவூர் வட்டம் புதுப்பட்டிணம், ஒரத்தநாடு வட்டம் மேலஉளுர், பட்டுக்கோட்டை வட்டம் சொக்கனாவூர் ஆகிய கிராமங்களில் வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாய பயிர்களை தேசிய கூட்டுறவு மேம்பாட்டு கழக மேலாண்மை இயக்குநர் திருமதி.வசுதாமிஸ்ரா அவர்கள் தலைமையில் முதன்மை செயலாளர்/வருவாய் நிர்வாக ஆணையர் டாக்டர் கே..சத்தியகோபால் அவர்கள், மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை அவர்கள் முன்னிலையில் இன்று (24.01.2017) பார்வையிட்டு விவசாயிகளிடம் குறைகளை கேட்டறிந்தனர்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் காவிரி தண்ணீர் நம்பி விவசாயிகள் விவசாய பயிர்கள் செய்து வருகின்றனர். சம்பா பயிர் சாகுபடி செய்ய தமிழக அரசு மேட்டுர் அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிட்டது. அணையில் போதிய அளவு தண்ணீர் இல்லாததாலும், இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை மற்றும் வடகிழக்கு பருவ மழை பொய்த்துள்ளதாலும், விவசாயிகள் பயிரிடப்பட்டுள்ள பயிர்கள் வறட்சியால் கருகியுள்ளது. இப்பயிர்களை பார்வையிடுவதற்காக மத்தியக் குழு திருமதி.வசுதாமிஸ்ரா அவர்கள், தமிழக அரசு முதன்மை செயலாளர்/வருவாய் நிர்வாக ஆணையர் டாக்டர் கே.சத்தியகோபால் அவர்கள், ஆலோசகர் நிதி கமிஷன் பிரிவு .டினாநாத் அவர்கள், Deputy Director, PRSO சுமித்குமார் ஆகியோர் கொண்ட குழு தஞ்சாவூர் மாவட்டத்தில் விவசாயிகள் பயிர் செய்யப்பட்டுள்ள நிலங்களில் நேரடியாக சென்று பார்வையிட்டும், விவசாயிகளிடம் கலந்துரையாடல் செய்து அவர்களின் குறைகளை கேட்டறிந்தனர்.
இந்த ஆய்வில் பாராளுமன்ற உறுப்பினர் கு.பரசுராமன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெ.மகேஷ், மாவட்ட வருவாய் அலுவலர் பெ.சந்திரசேகரன், வருவாய் கோட்டாட்சியர்கள் சுரேஷ் (தஞ்சாவூர்), ம.கோவிந்தராசு (பட்டுக்கோட்டை), வேளாண்மைத்துறை இணை இயக்குநர் கிருஷ்ணகுமார், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்) சொக்கலிங்கம், வட்டாட்சியர்கள் குருமூர்த்தி, கஜேந்திரன், ரவிச்சந்திரன் மற்றும் விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் காவிரி தண்ணீர் நம்பி விவசாயிகள் விவசாய பயிர்கள் செய்து வருகின்றனர். சம்பா பயிர் சாகுபடி செய்ய தமிழக அரசு மேட்டுர் அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிட்டது. அணையில் போதிய அளவு தண்ணீர் இல்லாததாலும், இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை மற்றும் வடகிழக்கு பருவ மழை பொய்த்துள்ளதாலும், விவசாயிகள் பயிரிடப்பட்டுள்ள பயிர்கள் வறட்சியால் கருகியுள்ளது. இப்பயிர்களை பார்வையிடுவதற்காக மத்தியக் குழு திருமதி.வசுதாமிஸ்ரா அவர்கள், தமிழக அரசு முதன்மை செயலாளர்/வருவாய் நிர்வாக ஆணையர் டாக்டர் கே.சத்தியகோபால் அவர்கள், ஆலோசகர் நிதி கமிஷன் பிரிவு .டினாநாத் அவர்கள், Deputy Director, PRSO சுமித்குமார் ஆகியோர் கொண்ட குழு தஞ்சாவூர் மாவட்டத்தில் விவசாயிகள் பயிர் செய்யப்பட்டுள்ள நிலங்களில் நேரடியாக சென்று பார்வையிட்டும், விவசாயிகளிடம் கலந்துரையாடல் செய்து அவர்களின் குறைகளை கேட்டறிந்தனர்.
இந்த ஆய்வில் பாராளுமன்ற உறுப்பினர் கு.பரசுராமன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெ.மகேஷ், மாவட்ட வருவாய் அலுவலர் பெ.சந்திரசேகரன், வருவாய் கோட்டாட்சியர்கள் சுரேஷ் (தஞ்சாவூர்), ம.கோவிந்தராசு (பட்டுக்கோட்டை), வேளாண்மைத்துறை இணை இயக்குநர் கிருஷ்ணகுமார், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்) சொக்கலிங்கம், வட்டாட்சியர்கள் குருமூர்த்தி, கஜேந்திரன், ரவிச்சந்திரன் மற்றும் விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.