.

Pages

Friday, January 27, 2017

காதிர் முகைதீன் கல்லூரியில் தேசிய வாக்காளர் தின விழா !

அதிராம்பட்டினம், ஜன-27
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரியில்
தேசிய வாக்காளர் தின விழா புதன்கிழமை நடைபெற்றது.

இதில் “ஆர்வமான பங்களிப்புடன் தேர்தல் நடைமுறைகளில் பங்கேற்றல்” என்ற வாசகம் அனைத்து வாக்காளர்களும் அறியும் வகையில் நடத்தப்பட்டது. இவ்விழாவில் மாணவ, மாணவியர்கள் “வாக்காளராக இருப்பதில் பெருமை கொள்கிறேன், நான் வாக்களிக்க தயாராக உள்ளேன்” என்ற பேட்ஜ் அணிந்து சிறப்பித்தனர்.

இவ்விழாவில் கல்லூரியின் சார்பாக ரங்கோலி போட்டி நடத்தப்பட்டது. இப்போட்டியில் 25 மாணவிகள் பங்கேற்றனர். இப்போட்டியில் முதல் மூன்று இடங்களை பெற்று வெற்றி பெற்ற மாணவிகளுக்கு கல்லூரி முதல்வர் முனைவர் ஏ.எம்.உதுமான் முகையதீன் சான்றிதழ்கள் மற்றும் பரிசுகளை வழங்கி  பாராட்டினார்.

மேலும் பட்டுக்கோட்டையில் நடைபெற்ற தேசிய வாக்காளர் தின பேரணியில் கல்லூரியில் இருந்து சுமார் 100 மாணவ, மாணவிகள் தேர்தல் தொடர்பான, வாசகங்கள் அடங்கிய பதாகைகளுடன் கலந்து கொண்டனர்.

இந்த தேசிய வாக்காளர் தின விழாவிற்கான ஏற்பாடுகளை கல்லூரியின் நாட்டுநலப்பணித் திட்ட அலுவலர்கள் முனைவர்.எஸ்.சாபிரா பேகம், முனைவர்.கே.முத்துக்குமரவேல், முனைவர்.எம்.பழனிவேலு மற்றும் பேரா.என்.சேகர் ஆகியோர் செய்தனர்.
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.