துபாய் ஈமான் அமைப்பு இந்திய குடியரசு தினவிழாவையொட்டி ரத்ததான முகாமை நடத்தியது. இந்த ரத்ததான முகாம் துபாய் தேரா சலாஹுத்தீன் மெட்ரோ நிலையம் அருகில் உள்ள அஸ்கான் ஹவுசில் நடைபெற்றது. துபாய் அரசின் ரத்தான மையத்தின் ஆதரவுடன் ரத்ததான முகாம் சிறப்புடன் மேற்கொள்ளப்பட்டது.
இந்த ரத்ததான முகாமிற்கு ஈமான் அமைப்பின் தலைவரும், அரேபியா ஹோல்டிங்ஸ் குழுமங்களின் துணைத்தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநருமான் பி.எஸ்.எம். ஹபிபுல்லா தலைமை வகித்தார். பொதுச்செயலாளர் ஹமீது யாசின் வரவேற்றார்.
இந்திய துணை தூதரகத்தின் தொழிலாளர் நலத்துறை அதிகாரி என்.கே. நிர்வான், துபாய் அரசின் சமூக மேம்பாட்டுத்துறை அதிகாரி பழனிபாபு, வர்த்தப் பிரமுகர் சுல்தான், சமூக ஆர்வலர் இம்ரான் முஜீப், தமிழ் 89.4 எப்.எம். நிம்மி உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். அவர்கள் முகாமில் கலந்து கொண்டு ரத்ததானம் வழங்கியவர்களை பாராட்டி சான்றிதழ்களை வழங்கினர்.
இந்த முகாமில் தமிழக மாணவர்கள் ஹாத்திம் மௌலானா தலைமையில் வைட்டமின் டி, புகைபிடித்தல், மது அருந்துதல் உள்ளிட்ட விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தினர். அவர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது. ரத்ததான முகாமில் 200-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.
முகாம் சிறப்புடன் நடைபெற ஈமான் அமைப்பின் மக்கள் தொடர்பு மற்றும் ஊடகத்துறை செயலாளர் முதுவை ஹிதாயத், துணைப் பொதுச் செயலாளர் முகைதீன் அப்துல் காதர், செயலாளர்கள் காதர், பைஜுர், யாகூப், சமீம், செயற்குழு உறுப்பினர்கள் காமில், பரக்கத், சபீக் ரஹ்மான், நஜும் மரைக்காயர், சமீம் உள்ளிட்ட குழுவினர் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.