அதிராம்பட்டினம், ஜன-29
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் அருகே ஆழ்குழாய் கிணறு அருகே பள்ளம் தோண்டியபோது, மண் சரிந்து விழுந்து தொழிலாளி வெள்ளிக்கிழமை உயிரிழந்தார்.
அதிராம்பட்டினம் அடுத்த அணைக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி ச. ஆரோக்கியசாமி (70). இவருக்குச் சொந்தமான தென்னந்தோப்பில் உள்ள ஆழ்குழாய் கிணற்றிலிருந்த நீர்மூழ்கி மோட்டார் பழுதடைந்து விட்டதாம். அதை வெளியே எடுக்க முயன்றபோது நீர்மூழ்கி மோட்டார் ஆழ்குழாய்க்குள் சிக்கிக் கொண்டதாம். இதையடுத்து, அந்த மோட்டாரை வெளியே எடுப்பதற்காக ஆழ்குழாய் கிணற்றுக்கு அருகில் பள்ளம் தோண்டும் பணி வெள்ளிக்கிழமை தொடங்கியது. இப்பணியில் அதே ஊரைச் சேர்ந்த கூலித் தொழிலாளர்கள் சி. நாடிமுத்து (45), கட்டையன் (35), சுந்தரராஜ் (32) ஆகியோர் ஈடுபட்டிருந்தனர். அப்போது 10 அடி ஆழ பள்ளத்துக்குள் நின்று மண்ணை வெட்டி எடுத்துக் கொண்டிருந்த நாடிமுத்து மீது எதிர்பாராதவிதமாக மண் சரிந்து விழுந்ததாம். இதனால் மண்ணுக்குள் சிக்கிய நாடிமுத்து மூச்சுத் திணறி உயிரிழந்தார்.
பட்டுக்கோட்டை வருவாய்க் கோட்டாட்சியர் ஆர். கோவிந்தராசு, வட்டாட்சியர் ச. ரவிச்சந்திரன், ஏஎஸ்பி அரவிந்த் மேனன் ஆகியோர் சம்பவயிடத்தை பார்வையிட்டு மீட்புப் பணியில் ஈடுபட்டனர். தீயணைப்புத்துறை, பொக்லைன் இயந்திரம் ஆகியவற்றின் உதவியுடன் மண்ணுக்குள் புதைந்து கிடந்த நாடிமுத்துவின் சடலம் வெளியே எடுக்கப்பட்டது.
இச்சம்பவம் குறித்து பட்டுக்கோட்டை தாலுகா போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் அருகே ஆழ்குழாய் கிணறு அருகே பள்ளம் தோண்டியபோது, மண் சரிந்து விழுந்து தொழிலாளி வெள்ளிக்கிழமை உயிரிழந்தார்.
அதிராம்பட்டினம் அடுத்த அணைக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி ச. ஆரோக்கியசாமி (70). இவருக்குச் சொந்தமான தென்னந்தோப்பில் உள்ள ஆழ்குழாய் கிணற்றிலிருந்த நீர்மூழ்கி மோட்டார் பழுதடைந்து விட்டதாம். அதை வெளியே எடுக்க முயன்றபோது நீர்மூழ்கி மோட்டார் ஆழ்குழாய்க்குள் சிக்கிக் கொண்டதாம். இதையடுத்து, அந்த மோட்டாரை வெளியே எடுப்பதற்காக ஆழ்குழாய் கிணற்றுக்கு அருகில் பள்ளம் தோண்டும் பணி வெள்ளிக்கிழமை தொடங்கியது. இப்பணியில் அதே ஊரைச் சேர்ந்த கூலித் தொழிலாளர்கள் சி. நாடிமுத்து (45), கட்டையன் (35), சுந்தரராஜ் (32) ஆகியோர் ஈடுபட்டிருந்தனர். அப்போது 10 அடி ஆழ பள்ளத்துக்குள் நின்று மண்ணை வெட்டி எடுத்துக் கொண்டிருந்த நாடிமுத்து மீது எதிர்பாராதவிதமாக மண் சரிந்து விழுந்ததாம். இதனால் மண்ணுக்குள் சிக்கிய நாடிமுத்து மூச்சுத் திணறி உயிரிழந்தார்.
பட்டுக்கோட்டை வருவாய்க் கோட்டாட்சியர் ஆர். கோவிந்தராசு, வட்டாட்சியர் ச. ரவிச்சந்திரன், ஏஎஸ்பி அரவிந்த் மேனன் ஆகியோர் சம்பவயிடத்தை பார்வையிட்டு மீட்புப் பணியில் ஈடுபட்டனர். தீயணைப்புத்துறை, பொக்லைன் இயந்திரம் ஆகியவற்றின் உதவியுடன் மண்ணுக்குள் புதைந்து கிடந்த நாடிமுத்துவின் சடலம் வெளியே எடுக்கப்பட்டது.
இச்சம்பவம் குறித்து பட்டுக்கோட்டை தாலுகா போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.