அதிரை நியூஸ்: ஜன-28
இந்திய திருநாட்டின் 68 வது குடியரசு தினத்தை முன்னிட்டு சவூதி அரேபியாவின் தலைநகர் ரியாத்தில் பணிபுரியும் தமிழர்கள் அனைவரையும் ஒருங்கிணைத்து 'இந்தியன் சோசியல் போரம்', ரியாத்-தமிழ்நாடு மாநிலக் கமிட்டியின் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த குடியரசு தின பொதுக்கூட்டம் பத்தாவில் உள்ள ஷிபா அல்-ஜஸீரா மருத்துவமனை அரங்கத்தில் வைத்து ஜனவரி 26, 2017 அன்று நடைபெற்றது.
ஒற்றுமை கீதத்துடன் இனிதே துவங்கிய நிகழ்ச்சிக்கு 'இந்தியன் சோசியல் போரம்', ரியாத்- தமிழ்நாடு மாநிலக்கமிட்டியின் செயலாளர் சகோ.பைரோஸ் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார். 'இந்தியன் சோசியல் போரம்', ரியாத்-தமிழ்நாடு மாநிலக் கமிட்டி தலைவர் சகோ.சர்தார் அவர்கள் தலைமை தாங்கினார். பொதுச் செயலாளர் இன்ஜினியர் ரஷீத்கான் அவர்கள் முன்னுரை நிகழ்த்தினார்.
'இந்தியன் சோசியல் போரம்', ரியாத் மத்திய கமிட்டியின் துணைத் தலைவர் டாக்டர் யூசுப் அவர்கள் இந்திய சுதந்திர போராட்டத்தில் இஸ்லாமியர்களின் பெரும் பங்கினையும் தேசத்தின் விடுதலைக்கு பாடுபட்ட தலைவர்களையும் நினைவு கூர்ந்ததோடு சில வரலாற்று குறிப்புகளுடன் உரை நிகழ்த்தினார்.
நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப்பட்டிருந்த முன்னாள் தமிழ்சங்க தலைவர் வெற்றிவேல் , இந்தியா ஃப்ராடர்னிட்டி போரம்; ரியாத் தமிழ் பிரிவின் மாவட்ட செயலாளர் ரம்சுதீன், தமிழ்நாடு இஸ்லாமிய கூட்டமைப்பின் சார்பாக மாலிக் இப்ராஹிம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
மேலும் 'குடியரசு தினமும் குடிமக்களின் நிலையும்' எனும் தலைப்பில் இந்தியன் சோசியல் போரத்தின் மத்திய கமிட்டி செயலாளர் ஜாபீர் கமால் அவர்கள் குடியரசுதினத்தின் நோக்கத்தை பற்றியும்; பாடுபட்டு பெற்ற சுதந்திர தேசத்தில் இன்றைய ஆட்சியாளர்களால் மக்களின் அடிப்படை உரிமைகளும்; ஜல்லிக்கட்டு முதலான கலாச்சாரங்களும் பறிக்கப்பட்டு கொண்டிருப்பதை பற்றியும் தெளிவாக எடுத்துரைத்தார். அவரை தொடர்ந்து இந்தியன் சோசியல் போரம் கடந்த ஆறு மாதங்களாக செய்த சமூக நலப்பணிகளை பற்றி மாநிலக்கமிட்டி உறுப்பினர் அலாவுதீன் செம்மல் அவர்கள் மக்களோடு பகிந்துகொண்டார் மேலும் 'இந்தியன் சோசியல் போரத்தின்' சமூகநல பணிகளில் பொது மக்களும் தானாக முன்வந்து கலந்துகொள்ளும்படி கோரிக்கை விடுத்தார். சிறப்பாக நடந்த இந்நிகழ்ச்சியை மாநிலக்கமிட்டி உறுப்பினர் முஸ்தபா தொகுத்து வழங்கினர்.
இந்நிகழ்ச்சியில் பெருந்திரளாக கலந்துக்கொண்ட இந்தியன் சோசியல் போரத்தின் நிர்வாகிகள்,உறுப்பினர்கள், சிறப்பு விருந்தினர்கள் மற்றும் பொதுமக்கள் என அனைவரும் தங்களின் குடியரசு தின வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர். இறுதியாக 'இந்தியன் சோசியல் போரம்', ரியாத்-தமிழ்நாடு மாநிலக் கமிட்டி உறுப்பினர் ஆரிப் நன்றியுரை வழங்க நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது.
இந்திய திருநாட்டின் 68 வது குடியரசு தினத்தை முன்னிட்டு சவூதி அரேபியாவின் தலைநகர் ரியாத்தில் பணிபுரியும் தமிழர்கள் அனைவரையும் ஒருங்கிணைத்து 'இந்தியன் சோசியல் போரம்', ரியாத்-தமிழ்நாடு மாநிலக் கமிட்டியின் சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த குடியரசு தின பொதுக்கூட்டம் பத்தாவில் உள்ள ஷிபா அல்-ஜஸீரா மருத்துவமனை அரங்கத்தில் வைத்து ஜனவரி 26, 2017 அன்று நடைபெற்றது.
ஒற்றுமை கீதத்துடன் இனிதே துவங்கிய நிகழ்ச்சிக்கு 'இந்தியன் சோசியல் போரம்', ரியாத்- தமிழ்நாடு மாநிலக்கமிட்டியின் செயலாளர் சகோ.பைரோஸ் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார். 'இந்தியன் சோசியல் போரம்', ரியாத்-தமிழ்நாடு மாநிலக் கமிட்டி தலைவர் சகோ.சர்தார் அவர்கள் தலைமை தாங்கினார். பொதுச் செயலாளர் இன்ஜினியர் ரஷீத்கான் அவர்கள் முன்னுரை நிகழ்த்தினார்.
'இந்தியன் சோசியல் போரம்', ரியாத் மத்திய கமிட்டியின் துணைத் தலைவர் டாக்டர் யூசுப் அவர்கள் இந்திய சுதந்திர போராட்டத்தில் இஸ்லாமியர்களின் பெரும் பங்கினையும் தேசத்தின் விடுதலைக்கு பாடுபட்ட தலைவர்களையும் நினைவு கூர்ந்ததோடு சில வரலாற்று குறிப்புகளுடன் உரை நிகழ்த்தினார்.
நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப்பட்டிருந்த முன்னாள் தமிழ்சங்க தலைவர் வெற்றிவேல் , இந்தியா ஃப்ராடர்னிட்டி போரம்; ரியாத் தமிழ் பிரிவின் மாவட்ட செயலாளர் ரம்சுதீன், தமிழ்நாடு இஸ்லாமிய கூட்டமைப்பின் சார்பாக மாலிக் இப்ராஹிம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
மேலும் 'குடியரசு தினமும் குடிமக்களின் நிலையும்' எனும் தலைப்பில் இந்தியன் சோசியல் போரத்தின் மத்திய கமிட்டி செயலாளர் ஜாபீர் கமால் அவர்கள் குடியரசுதினத்தின் நோக்கத்தை பற்றியும்; பாடுபட்டு பெற்ற சுதந்திர தேசத்தில் இன்றைய ஆட்சியாளர்களால் மக்களின் அடிப்படை உரிமைகளும்; ஜல்லிக்கட்டு முதலான கலாச்சாரங்களும் பறிக்கப்பட்டு கொண்டிருப்பதை பற்றியும் தெளிவாக எடுத்துரைத்தார். அவரை தொடர்ந்து இந்தியன் சோசியல் போரம் கடந்த ஆறு மாதங்களாக செய்த சமூக நலப்பணிகளை பற்றி மாநிலக்கமிட்டி உறுப்பினர் அலாவுதீன் செம்மல் அவர்கள் மக்களோடு பகிந்துகொண்டார் மேலும் 'இந்தியன் சோசியல் போரத்தின்' சமூகநல பணிகளில் பொது மக்களும் தானாக முன்வந்து கலந்துகொள்ளும்படி கோரிக்கை விடுத்தார். சிறப்பாக நடந்த இந்நிகழ்ச்சியை மாநிலக்கமிட்டி உறுப்பினர் முஸ்தபா தொகுத்து வழங்கினர்.
இந்நிகழ்ச்சியில் பெருந்திரளாக கலந்துக்கொண்ட இந்தியன் சோசியல் போரத்தின் நிர்வாகிகள்,உறுப்பினர்கள், சிறப்பு விருந்தினர்கள் மற்றும் பொதுமக்கள் என அனைவரும் தங்களின் குடியரசு தின வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர். இறுதியாக 'இந்தியன் சோசியல் போரம்', ரியாத்-தமிழ்நாடு மாநிலக் கமிட்டி உறுப்பினர் ஆரிப் நன்றியுரை வழங்க நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.