.

Pages

Thursday, January 19, 2017

ஜல்லிக்கட்டு போராட்டத்தில் அதிரை தமுமுக-மமகவினர் !

அதிராம்பட்டினம், ஜன-19
மனிதநேய மக்கள் கட்சி தஞ்சை தெற்கு மாவட்டம் சார்பில் தஞ்சை பானகல் கட்டிடம் அருகே முண்டாசு கட்டி விவசாயிகள் வாழ்வுரிமை ஆர்ப்பாட்டம் இன்று வியாழக்கிழமை நடைபெற உள்ளது.

இதில் பங்கேற்க அதிராம்பட்டினம், மதுக்கூர், பட்டுக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளிலின் தமுமுக-மமகவினர் வாகனங்கள் மூலம் இன்று காலை தஞ்சை புறப்பட்டனர். அப்போது போகும் வழியில்  கண்ணுகுடி என்ற இடத்தில்  ஜல்லிக்கட்டு அதரவாளர்கள் சார்பில் தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டு ஜல்லிக்கட்டு போட்டி நடத்த சட்டம் இயற்ற வலியுறுத்தியும், பீட்டா அமைப்பை தடை செய்ய வலியுறுத்தி போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து தமுமுக-மமக நிர்வாகிகள் ஆர்வமுடன் கலந்துகொண்டனர்.

இதில் அதிரை அஹமது ஹாஜா, மதுக்கூர் கபார், அபுல்ஹசன் அலியுல் சாதுலி, கமாலுதீன், மதுக்கூர் பவாஸ் உட்பட பலர் பங்கேற்றனர்.
 
 
 
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.