.

Pages

Friday, January 20, 2017

விபத்தை தடுக்க அபுதாபி நெடுஞ்சாலையில் ரேடார் கேமராக்கள் !

அதிரை நியூஸ்: ஜன-20
சாலை பாதுகாப்பை உறுதி செய்யும் வகையிலும், தவறிழைக்கும் ஓட்டுனர்களை கண்காணிக்கும் வகையிலும் மேலும் பல ரேடார் கேமிராக்கள் மற்றும் போலீஸ் ரோந்தை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

அமீரகத்தில் அதிக விபத்துக்கள் நடைபெறும் முதல் 10 ஆபத்தான சாலைகளில் (Emirates top 10 dangerous road) ஒன்றான அபுதாபி – அல் சிலா (சவுதி செல்லும்) நெடுஞ்சாலையிலும், அபுதாபி – அல் அய்ன் சாலையிலும் நிரந்தர ரேடார் கேமராக்களும், ஓட்டுனர்களின் நடவடிக்கைகளை கண்காணிக்கும் வகையில் அதிக ரோந்து போலீஸ் வாகனங்களையும் ஈடுபடுத்தப்பட உள்ளன.

நிரந்தர ரேடார் கேமிராக்கள் எங்கெங்கு நிறுவப்பட்டுள்ளன என்பதை  ‘adpolicehq’  என்ற தளத்திலும், சமூக வலைதளங்களிலும் எந்நேரமும் ஓட்டுனர்கள் தெரிந்து கொள்ளலாம். அபுதாபி – அல் சிலா நெடுஞ்சாலையில் செல்வதற்கான வேகக்கட்டுப்பாட்டு பகுதிகள் மூன்றாக ( 3 stretches) பிரிக்கப்பட்டுள்ளன.

முதல் பகுதி: 1st stretch
அல் தப்ரா மேம்பாலத்திலிருந்து (Al Dhafra Bridge) பைனூனா காடுகள் (Baynunah Forest) வரை 100 km/h, 121 km/h எனும் கருணை வேகக் கட்டுப்பாட்டை (Grace Speed Limit) தொட்டது முதல் கேமரா பதிவு செய்யும்.

இரண்டாம் பகுதி: 2nd stretch
பைனூனா காடுகள் முதல் பரக்கா வரை 120 km/h வேகத்தில் செல்லலாம், 141 km/h எனும் கருணை வேகக் கட்டுப்பாட்டை தொட்டது முதல் கேமரா பதிவு செய்யும்.

மூன்றாம் பகுதி: 3rd Stretch
பரக்கா (Barakah) முதல் அல் குவைபத் (Al Guwaifat) வரை 100 km/h, 121 km/h எனும் கருணை வேகக் கட்டுப்பாட்டை தொட்டது முதல் கேமரா பதிவு செய்யும்.

அனைத்து பகுதிகளிலும் கனரக வாகனங்கள் (Heavy Truck) 80 km/h என்ற வேகத்திலேயே செல்ல வேண்டும்.

அனைத்து பகுதிகளிலும் பயணிகள் பேருந்துகள் (Passenger Buses) 100 km/h என்ற வேகத்திலேயே செல்ல வேண்டும்.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.