அதிரை நியூஸ்: ஜன-31
ஓமனில் பணிபுரியும் பல வெளிநாட்டினர் 3 மாதம், 6 மாதம் போன்ற குறுகியகால பணி ஒப்பந்தங்களின் கீழ் வேலை செய்து வருகின்றனர். இவர்களின் பணி காலத்திற்கு ஏற்றார்போல் இதுவரை வாடகை வீடுகளை ஒப்பந்தம் செய்துவந்த நிலையில் தற்போது 90 சதவிகித வீட்டு உரிமையாளர்கள் 1 வருட ஒப்பந்தத்திற்கு கீழ் வீடுகளை வாடகைக்கு தர மறுப்பதால் வேறு வழின்றி இப்பிரச்சனையில் சிக்கி பெரும் பொருளாதார இழப்பை சந்தித்து வருகின்றனர்.
ஓமன் அரசின் சிக்கன நடவடிக்கை, பெட்ரோல் விலை வீழ்ச்சி, ஒவ்வொரு முறையும் வீட்டு வாடகையின் மீது மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய 10 சதவிகித வரி மற்றும் 5 சதவிகித தரகர் கமிஷன் என செலுத்த வேண்டியுள்ளதாலும், ஒரு வருடத்திற்கு இடையில் வீட்டை காலி செய்து செல்லும் வாடகை குடியிருப்புவாசிகளுக்கு பதிலாக புதிய வீட்டு வாடகைதாரர் உடனே கிடைக்காத நிலை என்பன போன்ற பிரச்சனைகளே வீட்டு உரிமையாளர்களை இப்புதிய முடிவிற்கு தள்ளியுள்ளது.
மேலும், நீண்ட ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றிவரும் நிலையில் எதிர்பாராவிதமாக நிறுவனங்களால் பணிநீக்கம் செய்யப்படும் ஊழியர்களும் தங்களது எஞ்சியகால வீட்டு வாடகையை இழக்க வேண்டியுள்ளது.
இதற்கும் மேல் ஒழுங்காக வாடகை வீடுகளை உரிமையாளர்கள் பராமரிக்காத (general maintenance) காரணத்தால் வீட்டை காலி செய்தாலும் முழுமையாக ஒரு வருட வாடகையையோ அல்லது 3 மாதத்திற்கான வாடகையையோ உரிமையாளர்களுக்கு தண்டமாக அழ வேண்டியுள்ளது என்றும் வாடகைதாரர்கள் விசனப்படுகின்றனர்.
Source: Khaleej Times
தமிழில்: நம்ம ஊரான்
ஓமனில் பணிபுரியும் பல வெளிநாட்டினர் 3 மாதம், 6 மாதம் போன்ற குறுகியகால பணி ஒப்பந்தங்களின் கீழ் வேலை செய்து வருகின்றனர். இவர்களின் பணி காலத்திற்கு ஏற்றார்போல் இதுவரை வாடகை வீடுகளை ஒப்பந்தம் செய்துவந்த நிலையில் தற்போது 90 சதவிகித வீட்டு உரிமையாளர்கள் 1 வருட ஒப்பந்தத்திற்கு கீழ் வீடுகளை வாடகைக்கு தர மறுப்பதால் வேறு வழின்றி இப்பிரச்சனையில் சிக்கி பெரும் பொருளாதார இழப்பை சந்தித்து வருகின்றனர்.
ஓமன் அரசின் சிக்கன நடவடிக்கை, பெட்ரோல் விலை வீழ்ச்சி, ஒவ்வொரு முறையும் வீட்டு வாடகையின் மீது மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய 10 சதவிகித வரி மற்றும் 5 சதவிகித தரகர் கமிஷன் என செலுத்த வேண்டியுள்ளதாலும், ஒரு வருடத்திற்கு இடையில் வீட்டை காலி செய்து செல்லும் வாடகை குடியிருப்புவாசிகளுக்கு பதிலாக புதிய வீட்டு வாடகைதாரர் உடனே கிடைக்காத நிலை என்பன போன்ற பிரச்சனைகளே வீட்டு உரிமையாளர்களை இப்புதிய முடிவிற்கு தள்ளியுள்ளது.
மேலும், நீண்ட ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றிவரும் நிலையில் எதிர்பாராவிதமாக நிறுவனங்களால் பணிநீக்கம் செய்யப்படும் ஊழியர்களும் தங்களது எஞ்சியகால வீட்டு வாடகையை இழக்க வேண்டியுள்ளது.
இதற்கும் மேல் ஒழுங்காக வாடகை வீடுகளை உரிமையாளர்கள் பராமரிக்காத (general maintenance) காரணத்தால் வீட்டை காலி செய்தாலும் முழுமையாக ஒரு வருட வாடகையையோ அல்லது 3 மாதத்திற்கான வாடகையையோ உரிமையாளர்களுக்கு தண்டமாக அழ வேண்டியுள்ளது என்றும் வாடகைதாரர்கள் விசனப்படுகின்றனர்.
Source: Khaleej Times
தமிழில்: நம்ம ஊரான்
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.