அதிரை நியூஸ்: ஜன-29
சவுதியை தொடர்ந்து குவைத்திலும் வெளிநாட்டு ஊழியர்கள் தங்கள் குடும்பங்களுக்கு அனுப்பும் பணத்தின் மீது வரிவதிக்க வேண்டும் என குவைத் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் கருத்து தெரிவித்துள்ள நிலையில் பாராளுமன்ற உறுப்பினர்களில் பலர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
எதிர்வரும் வியாழன் அன்று குவைத்தியர்களை விட எண்ணிக்கையில் மிகைத்து வாழும் வெளிநாட்டினரை குறைப்பது குறித்து சிறப்பு விவாதம் ஒன்று நடக்கவுள்ள நிலையில், வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கான ஆதரவு நிலையை சிலர் மேற்கொண்டுள்ளனர்.
வெளிநாட்டு ஊழியர்களுக்கு வரிவிதிப்பது பண கடத்தலுக்கே வழிவகுக்கும் என்றும், குவைத்தியர்களுக்கு அந்நியர்களுக்கும் என இருவேறு சட்டங்களை கடைபிடிப்பதை இஸ்லாம் அனுமதிக்கவில்லை என்றும், தங்கள் குடும்பத்தை பிரிந்து நமது நாட்டிற்காக உழைப்பவர்களுக்கு செய்யும் கைமாறு இதுவல்ல என்றும் கடுமையான எதிர்ப்பினை எழுப்பியுள்ளனர். வரும் வியாழன் அன்று குவைத் பாராளுமன்றத்தில் சூடு பறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்
சவுதியை தொடர்ந்து குவைத்திலும் வெளிநாட்டு ஊழியர்கள் தங்கள் குடும்பங்களுக்கு அனுப்பும் பணத்தின் மீது வரிவதிக்க வேண்டும் என குவைத் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் கருத்து தெரிவித்துள்ள நிலையில் பாராளுமன்ற உறுப்பினர்களில் பலர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
எதிர்வரும் வியாழன் அன்று குவைத்தியர்களை விட எண்ணிக்கையில் மிகைத்து வாழும் வெளிநாட்டினரை குறைப்பது குறித்து சிறப்பு விவாதம் ஒன்று நடக்கவுள்ள நிலையில், வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கான ஆதரவு நிலையை சிலர் மேற்கொண்டுள்ளனர்.
வெளிநாட்டு ஊழியர்களுக்கு வரிவிதிப்பது பண கடத்தலுக்கே வழிவகுக்கும் என்றும், குவைத்தியர்களுக்கு அந்நியர்களுக்கும் என இருவேறு சட்டங்களை கடைபிடிப்பதை இஸ்லாம் அனுமதிக்கவில்லை என்றும், தங்கள் குடும்பத்தை பிரிந்து நமது நாட்டிற்காக உழைப்பவர்களுக்கு செய்யும் கைமாறு இதுவல்ல என்றும் கடுமையான எதிர்ப்பினை எழுப்பியுள்ளனர். வரும் வியாழன் அன்று குவைத் பாராளுமன்றத்தில் சூடு பறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.