அதிரை நியூஸ்: ஜன-26
அமெரிக்கா தொழிற்நுட்பத்தில் மிகவும் உச்சத்தில் உள்ள நாடு, எங்களால் முடியாதது எதுவும் இல்லை என மார்தட்டிக் கொள்ளும் நாடு. இன்றைக்கும் எந்தத் தொழிற்நுட்ப வசதிகளைப் பற்றியும் பெரியளவில்
தெரியாத தமிழக பழங்குடி இனமான 'இருளர்' மக்களிடத்தில் உதவி கேட்டு மண்டியிட்டுள்ளது, வல்லவனுக்கும் வல்லவன் இவ்வையகத்தில் உண்டு என்பதை நிரூபித்துள்ளது.
அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் சகட்டுமேனிக்கு பரவியுள்ள மலைப்பாம்புகளால் அங்குள்ள பிற உயிரினங்கள் விரைவாக அழிந்து அருகி வருகின்றன. மலைப்பாம்புகளின் எண்ணிக்கையை கட்டுப்படுத்துவதற்காக கடந்த வருடம் 'மலைப்பாம்பு சவால்' (Python Challenge) எனும் திட்டத்தின் கீழ் சுமார் 1000 பேர் ஒரு மாதம் நடத்திய தொடர் வேட்டையின் காரணமாக 106 பாம்புகள் பிடிபட்டது என்றாலும் கடந்த வருடம் பிடிபட்ட மொத்த பாம்புகளின் எண்ணிக்கை 200 மட்டும் தான்.
இந்நிலையில், மலைப்பாம்புகளை வேட்டையாடுவதில் மிகுந்த திறன்பெற்ற நம் தமிழகத்து பழங்குடியின மக்களான இருளர்கள் இருவரை அமெரிக்காவிற்கு வரவழைத்து பாம்பு பிடிக்க வைத்துள்ளனர், கடந்த ஒரு வாரத்தில் இவர்கள் பிடித்த மலைப்பாம்பின் எண்ணிக்கை மட்டும் 13, அதில் ஒரு பாம்பு 16 அடி நீளம் உடையது.
மலைப்பாம்புகளை மோப்பம் பிடித்து கண்டுபிடிப்பதில் புளோரிடா மற்றும் ஆவ்பர்ன் பல்கலைகழகங்களின் பாம்பு ஆய்வாளர்களால் (dogs trained by University of Florida and Auburn University researchers) பயிற்சியளிக்கப்பட்ட இரண்டு நாய்களுடன் வலம் வரும் இந்தத் தமிழர்கள் அமெரிக்கர்களுக்கும் இருளர் இன பாரம்பரிய முறைப்படி பாம்பு பிடிக்கவும் பயிற்சியளித்து வருகின்றனர்.
Source: Emirates 247
தமிழில்: நம்ம ஊரான்
அமெரிக்கா தொழிற்நுட்பத்தில் மிகவும் உச்சத்தில் உள்ள நாடு, எங்களால் முடியாதது எதுவும் இல்லை என மார்தட்டிக் கொள்ளும் நாடு. இன்றைக்கும் எந்தத் தொழிற்நுட்ப வசதிகளைப் பற்றியும் பெரியளவில்
தெரியாத தமிழக பழங்குடி இனமான 'இருளர்' மக்களிடத்தில் உதவி கேட்டு மண்டியிட்டுள்ளது, வல்லவனுக்கும் வல்லவன் இவ்வையகத்தில் உண்டு என்பதை நிரூபித்துள்ளது.
அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் சகட்டுமேனிக்கு பரவியுள்ள மலைப்பாம்புகளால் அங்குள்ள பிற உயிரினங்கள் விரைவாக அழிந்து அருகி வருகின்றன. மலைப்பாம்புகளின் எண்ணிக்கையை கட்டுப்படுத்துவதற்காக கடந்த வருடம் 'மலைப்பாம்பு சவால்' (Python Challenge) எனும் திட்டத்தின் கீழ் சுமார் 1000 பேர் ஒரு மாதம் நடத்திய தொடர் வேட்டையின் காரணமாக 106 பாம்புகள் பிடிபட்டது என்றாலும் கடந்த வருடம் பிடிபட்ட மொத்த பாம்புகளின் எண்ணிக்கை 200 மட்டும் தான்.
இந்நிலையில், மலைப்பாம்புகளை வேட்டையாடுவதில் மிகுந்த திறன்பெற்ற நம் தமிழகத்து பழங்குடியின மக்களான இருளர்கள் இருவரை அமெரிக்காவிற்கு வரவழைத்து பாம்பு பிடிக்க வைத்துள்ளனர், கடந்த ஒரு வாரத்தில் இவர்கள் பிடித்த மலைப்பாம்பின் எண்ணிக்கை மட்டும் 13, அதில் ஒரு பாம்பு 16 அடி நீளம் உடையது.
மலைப்பாம்புகளை மோப்பம் பிடித்து கண்டுபிடிப்பதில் புளோரிடா மற்றும் ஆவ்பர்ன் பல்கலைகழகங்களின் பாம்பு ஆய்வாளர்களால் (dogs trained by University of Florida and Auburn University researchers) பயிற்சியளிக்கப்பட்ட இரண்டு நாய்களுடன் வலம் வரும் இந்தத் தமிழர்கள் அமெரிக்கர்களுக்கும் இருளர் இன பாரம்பரிய முறைப்படி பாம்பு பிடிக்கவும் பயிற்சியளித்து வருகின்றனர்.
Source: Emirates 247
தமிழில்: நம்ம ஊரான்
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.