.

Pages

Thursday, January 19, 2017

அதிரையில் எம்ஜிஆர் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் நலத்திட்ட உதவிகள் !

அதிராம்பட்டினம், ஜன-19
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினத்தில் அதிமுக ஒன்றியம் சார்பில் தமிழக முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 100-வது பிறந்த நாள் விழா
பொதுக்கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

கூட்டத்திற்கு பட்டுக்கோட்டை ஒன்றியச் செயலர் பி. சுப்பிரமணியன் தலைமை வகித்தார். அக்கட்சியின் தலைமை பேச்சாளர் அரு. காத்தபிள்ளை கலந்துகொண்டு சிறப்புரை வழங்கினார்.

பட்டுக்கோட்டை எம்எல்ஏ சி.வி. சேகர் கலந்துகொண்டு 2 சைக்கிள், 2 தையல் இயந்திரங்கள், 2 இஸ்திரி பெட்டி ஆகிய நலத்திட்ட உதவிகளை 6 பயனாளிகளுக்கு வழங்கினார்.

இக்கூட்டத்தில் அம்மா பேரவை முன்னாள் மாவட்ட செயலர் சு. பாஸ்கரன், மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலர் மலை.அய்யன், முன்னாள் எம்எல்ஏ பி.என்.ஆர் ராமச்சந்திரன், அதிரை பேரூர் செயலர் ஏ. பிச்சை, அவைத்தலைவர் முண்டாசு காதர், துணைச்செயலர் முகமது தமீம், மாவட்ட சிறுபான்மை நலப்பிரிவு துணைத்தலைவர் எம்.பி அபூபக்கர், செயலாளர் அதிரை அப்துல் அஜீஸ், தஞ்சை தெற்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு இணை செயலாளர் சேதுராமன், எம்ஜிஆர் இளைஞர் அணி அதிரை பேரூர் செயலாளர் சிவக்குமார், முன்னாள் கவுன்சிலர் உதயகுமார், மு.க.செ அப்துல் ரஹ்மான், மு.க.செ ரபீக், அஹமது தாகிர், முஹம்மது ஹனீபா, அப்டா தமீம், ஹாஜா பகுரூதீன், யஹ்யாகான், பகுருதீன், அ.மு அப்துல் வஹாப், லியாகத் அலி, அசோக், காமராஜ், பார்த்தசாரதி, சாகுல்ஹமீது உட்பட ஏராளமான அதிமுகவினர் கலந்துகொண்டனர்.

தொடக்கத்தில் துரை. பாஞ்சாலன் வரவேற்றார். முடிவில் அதிரை பேரூர் அம்மா பேரவை செயலர் எம். உதயகுமார் நன்றி கூறினார்.
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.