டொனால்டு டிரம்ப் என்ற முஸ்லீம் வெறுப்பாளர் புதிய அமெரிக்கா ஜனாதிபதியாக பதவி ஏற்றுள்ளதை தொடர்ந்து அமெரிக்கா வாழ் முஸ்லீம்கள், அகதிகள் மற்றும் வெளிநாட்டு பிரஜைகள் மத்தியில் 'அமெரிக்காவின் அமைதி சீர்குலைந்துவிடுமோ?' என்ற அச்சம் கடுமையாக நிலவுகிறது.
இந்நிலையில், அமெரிக்க சின்சினாட்டி மாகாணத்தின் ஓஹியோ நகரில் வசிக்கும் லிபியாவைச் சேர்ந்தவருக்கு பக்கத்து வீட்டைச் சேர்ந்த அமெரிக்கர் செய்த செயல் உலக மக்களை மனம் நெகிழச் செய்துள்ளது.
லிபியா நாட்டு பிரஜையின் வீட்டு வாசலில் அண்டை வீட்டுக்காரரால் ஒட்டப்பட்டிருந்த அந்த துண்டு சீட்டு டொனால்டு டிரம்ப் போன்ற கொடுங்கோல் முட்டாள்கள் மட்டுமல்ல நல்லுள்ளம் கொண்ட சிறந்த மனிதர்களும் அமெரிக்காவில் வாழ்கிறார்கள் என்பதை உலகிற்கு படம்பிடித்து காண்பித்துள்ளது.
அண்டை வீட்டுக்காரர் ஒட்டிய துண்டுச் சீட்டு சொன்ன விஷயம் இது தான்,
'இன்று நம் நாடு ஒரு புதிய கட்டத்திற்குள் நுழைகிறது! உங்களுக்கு எதிராக என்ன நிகழ்ந்தாலும் சரியே, அறிந்து கொள்ளுங்கள் 'உங்களுடைய மார்க்கத்தை நீங்கள் உரிமையுடன் பின்பற்றி தொடர்ந்து வாழ்வதற்கும், எத்தகைய பாகுபாடுகளும் உங்களை தீண்டாமல் பாதுகாப்பதற்கும் நாங்கள் எண்ணற்றோர் என்றென்றும் உங்களுக்கு துணையாக இருக்கின்றோம்.
எங்களுடைய உதவி எப்போது தேவைப்பட்டாலும் எங்கள் வீட்டுக்கதவை தட்டுங்கள், அன்புடன் வரவேற்கின்றோம்' என்ற அழகிய ஆறுதல் வார்த்தைகளை உளப்பூர்வமாக பதிந்துள்ளார்.
மனம் திறந்து சொல்லுங்கள் சகோதரர்களே! இதைப் படித்த உங்களுடைய மனம் உங்களிடம் என்ன பேசியது? நான் அந்த மனிதரின் நேர்வழிக்காகவும், இறுதி வெற்றிக்காகவும் உளமாற பிரார்த்திக்கின்றேன்.
Sources: The Independent / Msn
தமிழில்: நம்ம ஊரான்
நெகிழ்ச்சி..!
ReplyDelete